search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில் மறியல்"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையா, ராமச்சந்திரன், திருவரசு, அசோகன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து, வேலையின்மைக்கு எதிராக காலி பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், என்.எல்.சி நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை மாற்று இடம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை கடலூர் மாவட்ட முழுவதும் பிரச்சார இயக்கம் தெரு முனை கூட்டம் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடியில் ெரயில் மறியல் போராட்டம். மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர்.
    • சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை வடலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஒப்பந்த தொழி லாளர்கள் பிரச்சனை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது .இதன் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக நெய்வேலி அண்ணா திடலில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட போரா ட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அமையும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி தெரிவித்தார். 

    • ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
    • கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அதை தடுக்க தவறிய மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையிலும் நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் குவிந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறினர்.


    இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    • 100-க்கும் மேற்பட்டோர் கைது
    • மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்

    போளூர்:

    போளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். கே.விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கினார்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கொம்மனந்தல் சுரேஷ் சேத்துப்பட்டு முனிரத்தினம், சத்யன், ஆரணி ராமலிங்கம், தெள்ளார் தனஞ்செழியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • 100 பேர் கைது
    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது

    ஆரணி:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ெரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அப்புறபடுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நகர தலைவர் பொன்னையன் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் நகர இளைஞரணி தலைவர் பிரபு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நகர செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×