search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல்
    X

    காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல்

    • 100-க்கும் மேற்பட்டோர் கைது
    • மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்

    போளூர்:

    போளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். கே.விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கினார்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கொம்மனந்தல் சுரேஷ் சேத்துப்பட்டு முனிரத்தினம், சத்யன், ஆரணி ராமலிங்கம், தெள்ளார் தனஞ்செழியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×