search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணியில் காங்கிரசார் ெரயில் மறியல்
    X

    ஆரணியில் காங்கிரசார் ரெயில் மறியல் செய்த போது எடுத்த படம்.

    ஆரணியில் காங்கிரசார் ெரயில் மறியல்

    • 100 பேர் கைது
    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது

    ஆரணி:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ெரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அப்புறபடுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நகர தலைவர் பொன்னையன் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் நகர இளைஞரணி தலைவர் பிரபு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நகர செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×