search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலிடம்"

    • 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம்.
    • 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிளான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 57 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 125 ஆம் ஆண்டுகள் கல்வி பணியாற்றி இவ்வாண்டு விழாக்காணும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி மாணவ.-மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 17 பதக்கங்களும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 25 பதக்கங்களும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 42 பதக்கங்களும் பெற்று 171 புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்தனர்.

    குழுப்போட்டிகளில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வளைகோல்பந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம், கூடைபந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மேசைபந்து முதலிடம். மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து இரண்டாம் இடம். கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.

    மாணவிகள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், வளையப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவ, மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, பி.மார்கண்டன், .சக்திவேல், .ஹரிஹரன், .ராக்கேஷ் ஆகியோரை பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலர் பாலசுப்ரமணியன், பள்ளி குழுதலைவர்.சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, உதவித்த லைமை ஆசிரியர்கள்.துளசிரெங்கன், . வரதராஜன் மற்றும் பள்ளி ஆசிரியரிகள், ஆசிரியைகள், அலுவலர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவ- மாணவிய ர்களுக்கான சதுரங்க போட்டி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சத்திய சாய் நாதன், கலை வாணன், தமிழ்வாணன் ஆகியோர் சதுரங்க போட்டி யில் நடுவராக இருந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர்.

    ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்றனர்.

    போட்டியில் இளையோர் பிரிவில் திருமீயச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பாவேந்தன் முதலிடத்தையும்,கோவில் திருமாகாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புருஷோத் இரண்டா மிடத்தையும், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சர்மால்ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    மேலோர் பிரிவில் சன்னாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அட்சயா இரண்டாமிடத்தையும், உபய வேதாந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆப்ரின்ஷிபானா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.மேன்மேலோர் பிரிவில் பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடத்தையும், பணங்குடி அரசு மேல்நிலை ப்பள்ளி ராஜபிரியன் இரண்டாமிடத்தையும், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ராம்பிரசாத் மூன்றா மிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாண வர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள்மேல்நி லைப்பள்ளி தலைமை யாசிரியர் சான்றி தழ்களை வழங்கினார்.

    • அஜய்குமார் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
    • மாணவி சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 101 மாணவ-மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

    பள்ளியின் மாணவர் அஜய்குமார் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

    இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-

    தமிழ்-98, ஆங்கிலம்-95, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-100, கணிதம்-100.

    மாணவி சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-96, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-100.

    மாணவி லத்திபா இஹ்ஸானா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றார். இப்பள்ளியில் வேதியியலில் 4 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், கணக்கியலில் 4 பேரும், வணிகவியலில் 3 பேரும், பொருளியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    சாதனைபடைத்த மற்றம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டக்கல்லூரி பேராசிரியர் முகமது, பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர். 

    மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப்போட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் தகுதி பெற்ற 25 மாணவ, மாணவியர் பங்கேற்று பேசினார்கள். இதில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இளங்கலை 2-ம் ஆண்டு படிக்கும் மோகன்ராஜ் முதலிடம் பிடித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரத்திற்கான காசோலை பெற்று சாதனை படைத்தார்.

    இவரை கல்லூரியின் முதல்வர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி, பீகார் பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அவரது வருகைப்பதிவில் சர்ச்சை எழுந்துள்ளது. #NEET
    பாட்னா:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.

    இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதேபோல, பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    விருப்பப் பாடமாக அறிவியல், கலை மற்றும் வணிகவியலை தேர்வு செய்து படித்த கல்பனா குமாரி, இந்த ஆண்டுக்கான இறுதித்தேர்வில் 500-க்கு 434 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெகுலர் முறையில் படித்தது தெரியவந்துள்ளது.

    2 ஆண்டுகளாக டெல்லியில் நீட் பயிற்சி பெற்று வந்த அவர், பீகாரின் ஷெயோகரில் உள்ள பள்ளிக்கு எப்படி வந்து தினமும் பாடங்களை கவனித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதிய வருகைப்பதிவு இல்லாமல் அவர் பள்ளி இறுதித்தேர்வு எழுதியது எப்படி எனவும் சர்ச்சை எழுந்தது.

    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில கல்வித்துறை பத்தாம் வகுப்பு மற்றும் இறுதி ஆண்டு தேர்வுக்கு வருகைப்பதிவு அவசியமில்லை என தெரிவித்துள்ளது. 
    ×