search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 பேர் பலி"

    ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
    நகரி:

    ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை.

    இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை.

    வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

    நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.


    மேலும் மற்ற மாவட்டங்களில் 107.6 டிகிரி முதல் 113 டிகிரிவரை பதிவானது. இதனால் ஆந்திரா முழுவதும் வெயில் தாக்கம் உள்ளது.

    இந்த நிலையில் ஆந்திராவில் வருகிற 25-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்ப காற்று கடுமையாக வீசும் என்று அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் பல மாவட்டங்களில் 113 டிகிரி முதல் 118.4 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் இதில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளான குண்டூர், பிரகாசம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

    அதேபோல இந்திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்து உள்ளது. 25-ந்தேதி முதல் ராயலசீமாவில் வெப்ப காற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

    காற்றில் ஈரப்பதம் குறைந்ததே வெப்ப காற்று கடுமையாக வீச காரணமாகும்.

    இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் நிலையில் 5 நாட்கள் வெப்ப காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது பொது மக்களை பீதியடைய செய்துள்ளது.
    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் 15 மாநிலங்களில் உள்ள 117 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்



    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்குகிறார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
    ‘ஆதிரை, பரணி, கார்த்திகை
    ஆயில்யம், முப்பூரம், கேட்டை
    தீதரு விசாகம் ஜோதி
    சித்திரை மகம் எராரும்
    மாதனம் கொண்டார் தாரார்
    வழிநடைப் பட்டார் மீளார்
    பாய்தனில் படுத்தோர் தேரார்
    பாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.

    மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
    கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ColombiaPlaneCrash #EmergencyService
    கொலம்பியா:

    கொலம்பியாவில் உள்ள சான் கார்லோஸ் டி கரோரா என்ற பகுதியில் டக்லஸ் டிசி3 விமானம் விபத்துக்குள்ளானது.  மேலும் இதில் பயணம் செய்த 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விபத்துக்குள்ளான விமானம் விபத்து நடப்பதற்கு முன் அவசர நிலையயை  அறிவித்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #CBSEClass12Exam #CBSE
    சென்னை:

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற்ற 21 ஆயிரத்து 400 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 4 ஆயிரத்து 974 மையங்களிலும், அங்கீகாரம் பெற்று வெளிநாடுகளில் இயங்கும் 225 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 78 மையங்களிலும் தேர்வு எழுதுகிறார்கள். இந்தியாவில் 4,974 தேர்வு மையங்களில் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு கேள்வித்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கட்டாயம் தேர்வு அறைக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இந்த அடையாள அட்டைகள் இன்றி வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பேனாக்கள் மற்றும் அடிப்படை உபகரணங்களை மட்டுமே தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பென்சில் பாக்ஸ் கொண்டு செல்லலாம் ஆனால் அதில் எதுவும் எழுதியிருக்கக்கூடாது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மட்டும், நொறுக்குத்தீனி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அனைவரும் தண்ணீர் பாட்டில்களை வெளிப்படையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    செல்போன், புளூடூத் ஸ்பீக்கர், ஹெட்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ஹெல்த் பேண்டு உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பிரிண்டிங் செய்யப்பட்ட மற்றும் கைப்பட எழுதப்பட்ட எந்த பொருளுக்கும் அனுமதி இல்லை. சிப்ஸ், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் தவறான மற்றும் பொய் செய்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திருப்பதி தெரிவித்துள்ளார்.

    அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்வினை 4,974 மையங்களில் 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள் எழுதுகின்றனர்.

    தேர்வு பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டை விட ஒருவாரம் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளது. #CBSEClass12Exam #CBSE
    ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.
    பொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.

    பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும் நிலை ஏற்படும்.  கீழ்கண்ட கிழமைகளில் பட்சி அரசாட்சி செய்யும் நேரம் பார்த்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது.

    எந்த ராசிக்காரர்கள் எந்த கிழைமையில் தங்கம் வாங்கலாம் என்று பார்ப்போம்…..

    மேஷம் - ஞாயிறு, வெள்ளி
    ரிஷபம் - புதன், வெள்ளி
    மிதுனம் - திங்கள், வியாழன்
    கடகம் - ஞாயிறு, திங்கள், புதன்

    சிம்மம் - புதன், வெள்ளி
    கன்னி - சனி
    துலாம் - திங்கள், வெள்ளி
    விருச்சிகம் - சனி

    தனுசு - வியாழன்
    மகரம் - புதன், வெள்ளி
    கும்பம் - புதன், வெள்ளி, ஞாயிறு
    மீனம் - வியாழன், திங்கள்

    ஆகிய நாட்களில் சித்தயோகம் சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில், ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.
    உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
    டேராடூன்:

    உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது.

    இந்நிலையில், இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

    சட்ட விரோதமாக நடக்கும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
    ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
    ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

    * ஞாயிறு- (சூரியன்): கோதுமை அல்வா, கோதுமை பாயசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.

    * திங்கள் - (சந்திரன்): பால், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

    * செவ்வாய் - (அங்காரகன்): துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரீச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவையல்.

    * புதன் - (புதன்): கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்தமல்லி சட்னி, வாழைப் பழம், கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

    * வியாழன் - (குரு): சுக்கு காபி அல்லது கசாயம், சோளம் சூப், கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரீச்சை கலந்த தயிர் சாதம்.

    * வெள்ளி - (சுக்ரன்): பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், வாழைத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

    * சனி- (சனீஸ்வரன்): ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, பிஸ்தா கலவை.

    இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களை பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே. இவற்றில் உங்கள் வசதிக்கு தக்கபடி ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.
    ஒரு மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு, அவன் முற்பிறவியிலே செய்த ‘பாவமும், புண்ணியமும்’ தான் காரணம். அதனால் நாம் வாழும் பூமிக்கு ‘தர்ம, கர்ம பூமி’ என்று பெயர்.

    ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு எல்லாம் தனது பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச நாம் கேட்டிருக்கலாம்.

    ஜாதகத்திலே 9-வது இடம் தான் ‘உயர்வானதை அடைவது’, அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9-வது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்; எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

    ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இருக்கும்படி பிறந்தவர், தடுமாறுகிறார்; போராடுகிறார்; இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். ‘எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்பது பலருடைய ஆதங்கம். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

    ‘தோஷம்' என்றால் ‘குற்றம் அல்லது குறை’ எனப்படும். ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம். இந்த தோஷம் 2 காரணங்களால் உருவாகுகிறது. அதாவது கோபம், சாபம்.

    ‘கோபம்’ என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ‘கோபம்’ என்பது பாதிக்கப்பட்டவர் அதற்கு காரணமானவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

    ‘சாபம்’ என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர், வேதனையுடன் கண்ணீருடன் வெளிப்படுத்தும் எதிர்மறை வார்த்தைகள்.

    கோபம் நான்கு வகையாக இருக்கிறது.

    1. ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும்.
    2. 2 நாழிகை, அதாவது 48 மணி நேரம் நீடிக்கும்.
    3. கோபம் - ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.
    4. கோபம், அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து, பகையை உள்ளுக்குள் வளர்த்து விடும்.

    கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல் போன்ற 8 தீய குணங்கள் தோன்றுகின்றன.

    ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக நாம் கூறும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி. 1-ல் சூரியன் சுட்டெரிக்கும் கோபம். நியாயமான செயலுக்கு மட்டுமே வரும். நம் ஆத்ம காரன் சூரிய பகவானே. 1-ல் செவ்வாய் அடக்க முடியாத ஆணவம் நிறைந்த கோபம். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர் செவ்வாய். 1-ல் சனி இருப்பது நியாயத்தை நிலை நாட்டும் கோபம். நம் கர்ம காரகன் சனி பகவான். அதனால் தான் அவர் துலாத்தில் உச்சம் அடைகிறார்.



    சனி, செவ்வாய் இருவரும் ராகு-கேது, மாந்தியுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்துகிறது. திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும், சாபமும், ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.

    எத்தகைய தோஷமானாலும் விமோசனம் உண்டா? இல்லையா? என்பதே கேள்வி. நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு, மீள முடியாத விளைவை தருகிறது. ‘ஆறுவது சினம்’ என்ற அவ்வை பாட்டியின் கூற்றிற்கு ஏற்ப, கோபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு வடிகால் உண்டு. சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல.

    கண்ணுக்கு தெரிந்த, தெரியாத பல்வேறு தோஷங்கள் இருந்தாலும், பிரதானமாக ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் 21 வகையான தோஷங்கள் கண்டறியப்படுகின்றன.

    காற்றை மாசு படுத்துதல், சுத்தமான காற்றைத் தரும் விருட்சங்களை அழித்தல், மழை நீர் பூமியில் புக முடியாமல் கழிவு பொருட்களை பயன்படுத்தி பூமியை மாசு படுத்துவது, நீர் நிலைகளை அழித்து குடியிருப்பு பகுதியாக்குவது போன்ற இயற்கை பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இயற்கை நிச்சயம் பதிலடி கொடுக்கும்.

    புனித யாத்திரை செல்லும் பயணிகள் புண்ணிய புனித தீர்த்தங்களில் தங்கள் உடைகளை விடுவது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி நீர்நிலையை அசுத்தம் செய்வதும் நிச்சயம் கர்மவினையைத் தரும். வினைப்பயனை குறைக்க தவறான வழிமுறையை பயன்படுத்தினால், அது கூடுதல் வினையை சேர்த்த பலனையே கொடுக்கும்.

    பசுவதை செய்பவர்களுக்கு ‘கோ சாபம்’ ஏற்படும். பறவைகளை கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவர் களுக்கு ‘பட்சி சாபம்’ ஏற்படும். சக மனிதனின் கோப சாபத்தை விட, இயற்கை விடும் சாபத்திற்கும், ஐந்தறிவு ஜீவன் விடும் சாபத்திற்கும் வலிமை அதிகம்.

    ஒரு உயிர் தாயின் கருவறையில் உருவாகி, இடுகாடு செல்வது வரை அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் விருப்பப்படியே நடக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த உலகம் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப்படுவதால் தான் இறந்தவருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை.

    சக மனிதருக்குள் உருவாகும் கோபமும் சாபமுமே மறு பிறவி. கோபமும் சாபமும் இல்லை என்றால் மறுபிறவி என்பதே என்ற ஒன்று கிடையாது. கோபத்தையும் சாபத்தையும் உருவாக்கியவனும், உருவாகச் செய்தவனும் பிறவி எடுத்து தங்கள் கோபத்தையும், சாபத்தையும் தீர்த்துக் கொள்ளும் போதே அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.

    எவ்வளவு பூஜை செய்தாலும், வரம் பெற்றாலும், மாந்த்ரீகம் செய்தாலும் ஒரு நல்லவரை அழிக்க முடியாது. ஆனால் ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.

    - பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி.
    நாளை புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் (2019) 12 ராசிகளின் படி பெண்களுக்கான சிறப்பு பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    மேஷம்

    மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடும். சனி, செவ்வாய் பார்வை காலத்தில் மனக்கவலை அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் பிரச்சினைகள் உருவாகும். சிந்தித்து செயல்பட்டால் வந்த துயர் விலகும்.

    ரிஷபம்

    ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஓர் இனிய ஆண்டாக அமையப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். சென்ற ஆண்டில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கேட்ட இடத்திற்கு இடமாறுதல் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பளமும், வந்து சேரும். பிரதோஷ வழிபாடும், குலதெய்வ வழிபாடும் பெருமை சேர்க்கும்.

    மிதுனம்

    மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பேணி வைத்துக்கொள்வது இயலாத காரியமாகத் தெரியும். இருப்பினும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நினைத்தது நிறைவேறும்.பிள்ளைகளுக்கான வேலை வாய்ப்பும், மாலை சூடும் வாய்ப்பும் கைகூடும். உடன்பிறப்புகளின் பகை உருவாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு இனிய தகவல் வந்து சேரும். ஆஞ்சநேயர் வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு பிரச்சினைகளிலிருந்து விடுபடும் ஆண்டாக அமையப்போகின்றது. வருடத்தொடக்கத்தில் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு பின்னோக்கிச் சென்று முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகின்றது. மேலும் குரு பார்வையாலும், குடும்ப முன்னேற்றம் கூடுதலாகவே இருக்கும். கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இனிய பலன்கள் நடைபெற சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவது நல்லது.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டில் சுபச்செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளால் உங்களுக்கு உதிரி வருமானங்கள் கிடைக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல செய்தி இல்லம் தேடிவரும். வீடு வாங்கும் யோகமும், பழைய நகைகளைப் புதுப்பித்து புதிய ஆபரணம் வாங்கும் யோகமும் கைகூடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதால் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், சர்ப்ப சாந்தியும், குருப்பிரீதியும் செய்வது நல்லது.

    கன்னி

    கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வருடத் தொடக்கத்தில் வசந்த காலமாகவே இருக்கும். சுப காரியப் பேச்சுகள் கை கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும். ெவளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பின் எடுக்கும் முயற்சி வெற்றி தரும். வராகி வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் வருங்காலத்தை நலமாக்கிக் கொடுக்கும்.

    துலாம்

    துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் மனக்கவலை மாறும். மங்கல காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு சிறப்பாக முடிவடையும். 5-ம், 9-ம் மிஞ்சும் பலன்தரும் என்பதால், 9-ம் இடத்திற்கு ராகு வருவதற்கு முன்னதாகவே பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. குலதெய்வ வழிபாடும், வராகி வழிபாடும் குடும்ப முன்னேற்றத்தைக் கூடுதலாக்கும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையப் போகின்றது. மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். மக்கள் செல்வங்களின் கல்யாண காரியங்கள் துரிதமாக நடைபெறும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் நிலையங்களுக்குக் கூட உங்களை உரிமையாளராக்க குடும்பத்தினர் சம்மதிப்பர். தாய்வழி ஆதரவும், சகோதரவழி ஆதரவும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், குலதெய்வ வழிபாடும், ஆதியந்தப் பிரபு வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

    தனுசு


    தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பொருளாதார நிலை உயரும் ஆண்டாக அமையப் போகின்றது. ராசிநாதன் செவ்வாயைக் குரு பார்ப்பதன் மூலமும் குருமங்கள யோகத்தையும், சூரியன் புதனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்கும் விதத்தில் ஆண்டு தொடங்குவதால் மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். பிப்ரவரி மாதம் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குருபகவான் வழிபாடும் ராகு-கேது பிரீதியும் நலங்களையும், வளங்களையும் வரவழைத்துக்கொடுக்கும்.

    மகரம்

    மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் வருமானப் பெருக்கத்திற்கு வழிபிறக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும், ஆதரவும் கூடும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியப் பேச்சுகளை தீவிரமாகப் பேசி முடிப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். அதே போல அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி புரியும் இடத்தில் இருந்த சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எதிர்பார்த்த இடமாற்றங்கள் அமையும். இனிய வாழ்வமைய குலதெய்வ வழிபாட்டையும், விநாயகப் பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

    கும்பம்

    கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சீரும், சிறப்பும் தரும் ஆண்டாக அமையப் போகின்றது.செல்வ நிலை உயரும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய கல்யாணம் கைகூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன்-மனைவி உறவில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு புதிய வாழ்வை அமைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உயர்பதவியும், ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடி வந்து சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. புனித ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாடும், ஆறுமுகப்பெருமான் வழிபாடும் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கூட்டும்.

    மீனம்

    மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத்தில் தொடக்கம் வளர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குருமங்கள யோகத்தால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யமும், அன்பும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உத்தியோகத்திலும், பதவியிலும் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். பணிபுரியும் பெண்கள் திடீர் என பதவி மாற்றம் காண்பர். நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைத்து மனக்கவலை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு, குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும், ராகு-கேது பிரீதியும் இனிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.
    ×