search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Dollars"

    மாலத்தீவு நாட்டுக்கு 140 கோடி அமெரிக்க டாலர்கள் கடனுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #Indiaassistance
    புதுடெல்லி:

    மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின்போது இருநாடுகளுக்கும் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

    நமது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. எனவே, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


    தீவுநாடான மாலத்தீவில் தொழில்களை தொடங்க அதிகமான வாய்ப்புகள் காத்திருப்பதாக குறிப்பிட்ட மோடி, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அவரை தொடர்ந்து பேசிய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுடன் இணைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்வழி, வான்வழி கண்காணிப்பை பலப்படுத்துவது தொடர்பாக இருநாடுகளும் தீர்மானித்துள்ளதாக கூறினார்.

    இதைதொடர்ந்து, மாலத்தீவு நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக 140 கோடி அமெரிக்க டாலர்களை நீண்டகால கடனுதவியாக இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். #Indiaassistance  
    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த விமானத்தில் கடத்த முயன்ற ரூ.12 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரது சூட்கேசில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.

    இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுரேந்திரன், ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்பின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது அவர் சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்ககட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    முகமது ஆரிப் முதலில் துபாயில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தூர் சென்று சென்னைக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. #tamilnews
    ×