என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ரூபாய் வீழ்ச்சி"
- 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது கேள்வி எழுப்பினார்.
- நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது, ஒரு டாலருக்கு ரூ.90க்கும் கீழே சரிந்துள்ளது.
நேற்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 28 பைசாக்கள் சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூ.90.43 ஆகக் குறைந்தது.
இந்நிலையில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"ரூபாய் மதிப்பு ஏன் சரிந்து வருகிறது? பிரதமரிடம் நரேந்திர மோடியின் கேள்வி" என்ற தலைப்பில் மோடியின் வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், "நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.
மும்பை:
அன்னிய செலாவணியின் இருப்பு மாற்றம், கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காணரங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், உரிய பலன்கள் கிடைக்காமல் இந்திய பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்ற நிதி கொள்கை முடிவை அறிவித்தது. இதனால் ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சி அடைந்து 74 ரூபாய் 22 காசு ஆனது.
அதன் பிறகு சற்று பணத்தின் மதிப்பில் எழுச்சி ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை 73 ரூபாய் 76 காசாக இருந்தது. நேற்று மார்க்கெட் ஆரம்பமான போது அதில் 14 காசு உயர்ந்து இருந்தது.

அதன் பிறகு அதிகபட்சமாக 74 ரூபாய் 10 காசு ஆனது. நேற்றைய மார்க்கெட் முடிவில் 74 ரூபாய் 6 காசாக இருந்தது.
இத்தனைக்கும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 4 டாலர் வரை குறைந்துள்ளது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 86.74 டாலராக இருந்தது. அது, இப்போது 82.89 டாலராக குறைந்துள்ளது.
கச்சா எண்ணை விலையின் தாக்கத்தால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக கூறினார்கள். ஆனால், கச்சா எண்ணை விலை வீழ்ச்சி அடைந்த போதும் இந்திய ரூபாயின் மதிப்பு உயராமல் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவியதால் பணத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ந்துள்ளது என்று கூறினார். #IndianRupee #Dollar






