search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகைப்பதிவு"

    • காலை, மாலை இரு வேளையும் வருகைப் பதிவும், புவிசாா்குறியீடு புகைப்படமும் எடுப்பதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
    • செல்போன் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொண்டால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும்

    திருப்பூர்:

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் செல்போன் செயலி மூலம் கட்டாயம் வருகைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இதனால் ஜனவரி 1முதல் அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளும், 20 பேருக்கு மேல் பணிபுரியும் பணித் தளங்கள், 20 பேருக்கு குறைவாக பணிபுரியும் பணித்தளங்களில் உள்ளவா்கள் கட்டாயம் செல்போன் செயலி மூலம் காலை, மாலை இரு வேளையும் வருகைப் பதிவும், புவிசாா்குறியீடு புகைப்படமும் எடுப்பதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.செல்போன் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொண்டால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளாா்.

    • கடந்த 2 மாதங்களாக இந்த செயலி தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த உத்தரவு.

    சென்னை :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகைப்பதிவுக்கு என்று ''டி.என்.எஸ்.இ.டி. அட்டன்டென்ஸ்'' என்ற செயலி கல்வித்துறையால் தனியாக உருவாக்கப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக இந்த செயலி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியை அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    ஏற்கனவே வருகைப்பதிவுக்கு என்று இருக்கும் செயலியில் இருந்து வெளியேறி புதிய செயலியிலேயே வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதோடு, பழைய செயலி வருகிற 31-ந்தேதி முதல் செயல்படாது என்றும் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளைகளில் வருகைப் பதிவுகள் எடுக்கப்பட வேண்டும். இணையவசதி இல்லாத நேரங்களில் வருகைப்பதிவு செல்போனில் பதிவாகி, பின்னர் இணைய சேவை கிடைத்ததும், அதுவாகவே 'அப்டேட்' ஆகிவிடும் என்றும், இந்த நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி, பீகார் பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அவரது வருகைப்பதிவில் சர்ச்சை எழுந்துள்ளது. #NEET
    பாட்னா:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.

    இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதேபோல, பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    விருப்பப் பாடமாக அறிவியல், கலை மற்றும் வணிகவியலை தேர்வு செய்து படித்த கல்பனா குமாரி, இந்த ஆண்டுக்கான இறுதித்தேர்வில் 500-க்கு 434 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெகுலர் முறையில் படித்தது தெரியவந்துள்ளது.

    2 ஆண்டுகளாக டெல்லியில் நீட் பயிற்சி பெற்று வந்த அவர், பீகாரின் ஷெயோகரில் உள்ள பள்ளிக்கு எப்படி வந்து தினமும் பாடங்களை கவனித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதிய வருகைப்பதிவு இல்லாமல் அவர் பள்ளி இறுதித்தேர்வு எழுதியது எப்படி எனவும் சர்ச்சை எழுந்தது.

    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில கல்வித்துறை பத்தாம் வகுப்பு மற்றும் இறுதி ஆண்டு தேர்வுக்கு வருகைப்பதிவு அவசியமில்லை என தெரிவித்துள்ளது. 
    ×