search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுக்கள்"

    • 1695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
    • தாலுகா அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2-ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இறுதி நாளான நேற்று வரை 1695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதில் 850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நேற்று தாலுகா அலுவ லகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் இயற்கை மரணஈமச்சடங்கு நிதி, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 151 பயனாளி களுக்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சரவணமூர்த்தி, தனி தாசில்தார் மோகன்தாஸ், வட்ட வழங்கல் அலுவலர் பேபி, மண்டல துணை தாசில்தார்கள் மதன்ராஜ்,ராஜாகண்ணு, சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
    • வேட்புமனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4 நக ராட்சிகளின் வார்டு உறுப்பி னர்கள் 117 நபர்கள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 167 நபர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த வாக்காளர்களில் 9 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்களும், 3 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (10-ந்தேதி) வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 9 வேட்பு மனுக்களும், பேரூ ராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடமிருந்து இருந்து 6 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான மனுக்களை 14-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 14-ந் தேதிக்குள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.

    வருகிற 23-ந்தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்கள் 28-ந்தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • அளிக்கப்படும் மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும்.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில், வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட வுள்ளது. இதில்கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி காட்டு மன்னார் கோவில், சிதம்பரம், திருமுட்டம் , புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட் சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவல கத்தில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

    மேற்கண்ட முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை களில் பெயர் சேர்த்தல், முக வரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்த லுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும். மேற்குறிப்பிட்ட முகா மில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதர வற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தி னால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொது விநியோத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் அத்தியா வசியப் பொருட்களை பெறு வதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவரால் கைவிடப் பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக் களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க லாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடு கள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்புச் சட்டம் 2019-ன்படி நட வடிக்கை மேற்கொள் வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச் செரிக்கை நட வடிக்கைகளான முகக்க வசம் அணிதல், சமூக இடை வெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன் படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டி ருந்தது.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது. பொது மக்களிட மிருந்து வரப்பெற்ற 265 மனுக்களை உரிய முறையில் பரிசீலனை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தீர்வு கிடைத்திடவும், மனுக்களின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தக வல் தெரிவித்திட வேண்டும் எனவும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென வும் மாவட்ட கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து 621 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
    • சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தாலுகாவில் கடந்த 9-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கோட்டைக் குமார் தலைமை தாங்கினார்.

    நேற்று நடந்த ஜமாபந்தியில் பன்னிகுண்டு, கொக்குளம், திருமங்கலம் டவுன் உள்ளிட்ட 3 பிர்காக்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

    இந்த ஜமாபந்தியில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைபட்டா, இலவச வீட்டு பட்டா, முழு புலம், சப் டிவிஷன் என 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை ஆய்வு குழு அலுவலர் கோட்டைக்குமார் வழங்கினார்.

    இதில் திருமங்கலம் தாசில்தார் சிவராமன், சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 19-ந்தேதி நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
    • மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க நாள் அன்று பெரம்பூர் சரகத்திற்கும், வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வல்லம் சரகத்திற்கும், 17-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை சரகத்திற்கும், 18-ந்தேதி (வியாழக்கிழமை) ராமாபுரம் சரகத்திற்கும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.

    மொத்தம் 5 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருவாய் தீர்பாய நாட்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய விளம்பர பதா கையில் அமைக்க ப்பட்டிருந்தது.தனை பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளின் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து துறைகளின் முக்கியமான அறிவிப்புகளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்புகள், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, மகளிருக்கான இலவச பஸ் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவிப்பு, விவசாயி களுக்கான அறிவிப்பு, சாலை போக்குவரத்துக்கான அறிவிப்பு, பள்ளி கல்வி துறை அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியி டப்பட்ட அறிவிப்புகளின் புகைப்பட தொகுப்புகள் விளம்பர பதாகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.

    பார்வையிட்ட அமைச்சர் பொது மக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைத்திருப்பதாக பாராட்டினார். இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவக்குமார், அனைத்து ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.

    மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து குறைகளை மனுக்களாக பெற்றனர்.
    • மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைகள் தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை சரக காவல்துறை தலைவர் ஜெய்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜவகர் வரவேற்றார்.

    முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை மனுக்களாக பெற்றனர்.

    அந்த முகாமிலேயே மனுக்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    புகார் மனு கொடுத்த வந்தவர்களிடம் குறைகளை நேரடியாக விசாரணை செய்து அந்த முகாமிலேயே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்கள் குறைகள் தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமு, தங்கவேல், டி.எஸ்.பி. சஞ்சீவ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள்
    • 43 பயனாளிகளுக்கு இம்முகாம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார் பில், திருவட்டார் வட்டம், தும்பக்கோடு வருவாய் கிராமம் உன்னியூர் அரசு நடுநிலைப் பள்ளி வளா கத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது.

    முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றும், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க முகாமினை பார்வையிட்டும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் கடைகோடி வருவாய் கிராமங்களில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன்பெறு வதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும்.

    மேலும், வேளாண் மைத்துறை, தோட்டக்க லைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும், அவர்கள் விவசா யம் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளவும் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம் பேருதவியாக இருக்கிறது.

    ஊரக பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கான முழு முயற்சியினை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதோடு, அனைத் துத்துறை அலுவலர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    43 பயனாளிகளுக்கு இம்முகாம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்து கொண்டு, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அரசின் திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தீர்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து மனுதாரர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குலமங்கலம் கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் பீடர்-1 கிராமத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் குலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள நாடக அரங்கில் நடைபெற உள்ளது.

    இதில் மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு கலெக்டரிடம் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.

    ×