search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election of members"

    • சிவகங்கை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
    • வேட்புமனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4 நக ராட்சிகளின் வார்டு உறுப்பி னர்கள் 117 நபர்கள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 167 நபர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த வாக்காளர்களில் 9 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்களும், 3 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (10-ந்தேதி) வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 9 வேட்பு மனுக்களும், பேரூ ராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடமிருந்து இருந்து 6 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான மனுக்களை 14-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 14-ந் தேதிக்குள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.

    வருகிற 23-ந்தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்கள் 28-ந்தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சட்டப்பூர்வ ஆணையில் தெரிவித்தபடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    அதன்படி இன்று தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பெறப்பட்டது. வேட்பு மனு பெறுவதற்கான கடைசி நாள் 10-ந் தேதியாகும். 12-ந்தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 14-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதலும் நடைபெறும்.

    23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    24-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவு செய்யப்படும். 28-ந்தேதி புதியதாக தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்.

    தேர்தலில் மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினர்களும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் இருந்து 4 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சியில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 6 நகராட்சிகளின் 168 வார்டு உறுப்பினர்களும், 8 பேரூராட்சிகளின் 119 வார்டு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 300 வார்டு உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

    ஊரக, நகர்ப்புற பகுதிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும். ஊரகப்பகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, நகர்ப்புற பகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பிரசாத் ஆகியோர் உதவி தேர்தல் அலுவல ர்களாக செயல்படுவர்.

    இந்த தகவலை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான வளர்மதி வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவித்துள்ளார்.

    ×