search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர் முகாம்"

    • பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இதில் 50 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.

    இம்முகாமில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, காவல்துறை ஆய்வாளர்கள் கலைவாணி, மகாலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சேகரன், உமாபதி போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
    • மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
    • 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் அடங்கிய 287 மனுக்களும், மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

    மொத்தம் 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாரா யணன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 10-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • அளிக்கப்படும் மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும்.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில், வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட வுள்ளது. இதில்கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி காட்டு மன்னார் கோவில், சிதம்பரம், திருமுட்டம் , புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட் சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவல கத்தில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

    மேற்கண்ட முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை களில் பெயர் சேர்த்தல், முக வரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்த லுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும். மேற்குறிப்பிட்ட முகா மில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதர வற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தி னால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொது விநியோத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் அத்தியா வசியப் பொருட்களை பெறு வதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவரால் கைவிடப் பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக் களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க லாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடு கள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்புச் சட்டம் 2019-ன்படி நட வடிக்கை மேற்கொள் வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச் செரிக்கை நட வடிக்கைகளான முகக்க வசம் அணிதல், சமூக இடை வெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன் படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டி ருந்தது.

    • தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உஷாபொன்னி வளவன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார்.

    இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    ஊராட்சி செயலர் சத்தியா, ரேசன் கடை ஊழியர் ஜெகதீஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு-கடம்பூர், செய்யூர் -மடயம்பாக்கம், மதுராந்தகம் -செம்பூண்டி, திருக்கழுக்குன்றம் - நெம்மேலி, திருப்போரூர்-அகரம் வண்டலூர்-போலச்சேரி மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில், ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம். முகவரி மாற்றம். புதிய ரேஷன்கார்டு நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×