search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவில்"

    • கோபால்சாமி களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.
    • திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூர் அடுத்துள்ள நிச்சாம் பாளையம் ராம நாயக்க னூரை சேர்ந்தவர் கோபால்சாமி (26).

    இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கோபால் சாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் கோபால்சாமி மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

    இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய கோபால்சாமி விவசாய பயிருக்கு தெளிக்கும் களைக் கொல்லி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்து விட்டார்.

    இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால் சாமியை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால்சாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
    • மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த தொண்டூர் செங்காடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 57). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரங்கசாமி கடந்த 3 நாட்களாக வேலை க்கு செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார்.

    இதை தொடர்ந்து மது குடிக்க பணம் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்த தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி லட்சுமி அவரிடம் விசாரித்தார்.

    அப்போது மது குடிக்க பணம் இல்லாத தால் வாழ பிடிக்கவில்லை. எனவே மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை அடைத்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரி தாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
    • இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.

    ஈரோடு, டிச. 9-

    ஈரோடு, சடையம்பாளையம் ரோடு, முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (66) தொழிலாளி.

    கடந்த அக்டோபரில் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.

    அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பெரியார் தெருவை சேர்ந்தவர் முனேஷ் (28). பெயிண்டர். இவரது மனைவி தரணி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் முனேஷ் சிறு வயது முதல் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி மூச்சு விடவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டுக்கு வந்த முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவீர சிகிச்சை பிரிவில் இருந்த முனேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×