என் மலர்
நீங்கள் தேடியது "The laborer died after"
- ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த தொண்டூர் செங்காடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 57). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரங்கசாமி கடந்த 3 நாட்களாக வேலை க்கு செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார்.
இதை தொடர்ந்து மது குடிக்க பணம் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்த தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி லட்சுமி அவரிடம் விசாரித்தார்.
அப்போது மது குடிக்க பணம் இல்லாத தால் வாழ பிடிக்கவில்லை. எனவே மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.
இதை அடைத்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரி தாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார்.
- தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பெரிய புலியூர், காசிலிங்க புரம் பகுதியை சேர்ந்தவர் செம்மனன் (45). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ த்தன்று செம்மனன் சேவாக்க வுண்டனூ ர்-வைரமங்கலம் ரோடு காசிலிங்கபுரத்தில் வாய்க்கா ல் மோரி மீது குடிபோதையில் படுத்து இருந்தார்.
அவர் திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் செம்மனை மீட்டனர். வாய்க்காலுக்குள் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்கா க பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செம்மனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






