search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலுக்குள் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி
    X

    வாய்க்காலுக்குள் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி

    • திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார்.
    • தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பெரிய புலியூர், காசிலிங்க புரம் பகுதியை சேர்ந்தவர் செம்மனன் (45). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று செம்மனன் சேவாக்க வுண்டனூ ர்-வைரமங்கலம் ரோடு காசிலிங்கபுரத்தில் வாய்க்கா ல் மோரி மீது குடிபோதையில் படுத்து இருந்தார்.

    அவர் திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் செம்மனை மீட்டனர். வாய்க்காலுக்குள் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்கா க பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செம்மனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×