search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்து குடித்து"

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள காளிச்செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 58). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.

    இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் சம்பத்குமார் (25) சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார்.
    • பெற்றோர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    மணிகண்டனுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். இது குறித்து அவரது பெற்றோர் கேட்ட போது தான் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

    பின்னர் மீண்டும் மணிகண்டனுக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பெரியார் தெருவை சேர்ந்தவர் முனேஷ் (28). பெயிண்டர். இவரது மனைவி தரணி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் முனேஷ் சிறு வயது முதல் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி மூச்சு விடவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டுக்கு வந்த முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவீர சிகிச்சை பிரிவில் இருந்த முனேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×