search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி தற்கொலை"

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள காளிச்செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 58). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.

    இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் சம்பத்குமார் (25) சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×