search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea master"

    • இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் அடுத்த அமராவதிபாளையம் கருமாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 39). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் பணம், மற்றும் செல்போன் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் திண்டுக்கல், வேடச்சந்தூரை சேர்ந்த குமார் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார்.
    • பெற்றோர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    மணிகண்டனுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். இது குறித்து அவரது பெற்றோர் கேட்ட போது தான் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

    பின்னர் மீண்டும் மணிகண்டனுக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் நான்கு வழிச்சாலையில் பேரின்பபுரம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • வள்ளியூரை சேர்ந்தவர் ஜெகன். இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அகஸ்டின்(வயது 22). இவர் நான்கு வழிச்சாலையில் பேரின்பபுரம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு செங்குளம்-தமிழாக்குறிச்சி சாலையில் ேமாட்டார் சைக்கிளில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அகஸ்டின் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்

    வள்ளியூரை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் ஜெகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது வள்ளியூர் சந்தை எதிரே சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
    • பூஜை அறைக்குள் சென்ற லோகநாதன் கதவைஅடைத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த சிவசக்தி காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 53). இவர் ஒரு ஓட்டலில் டீ மாஸ்டாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தனியார் மில்லில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ராஜசேகர் (18), யுவராஜ்( 16 )ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குடி பழக்கத்திற்கு அ டிமையான லோகநாதன் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவதன்று வீட்டில் லோகநாதன் அவருடைய மனைவி மற்றும் இளைய மகன் யுவராஜ் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது லோகநாதன் தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார் தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கம் லோகநாதனுக்கு இருந்ததால் அதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை.

    இதனை அடுத்து பூஜை அறைக்குள் சென்ற லோகநாதன் கதவைஅடைத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். இதனால் சந்தேகம் அடைந்த யுவராஜ் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது லோகநாதன் ஒரு சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டிருந்தார். உடனடியாக யுவராஜ் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய லோகநாத னை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் பணம் கேட்டு டீ மாஸ்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்புபகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47),  டீ  மாஸ்டராக  வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் நடராஜனிடம் கத்தியை காட்டி பணம் தருமாறு  மிரட்டினார். பணம் தரவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தார். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர் பாலக்கரை மணல்வாரி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (48) என்பதும், இவர் மீது காந்தி மார்க்கெட், பாலக்கரை, பொன்மலை உள்ளிட்ட திருச்சி  மாநகர காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரமேசை கைது செய்தனர்.
    ×