search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mixing poison in wine"

    • விஜயக்குமார் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி நாகமலை எக்ஸ்ட ன்சன் வாய்க்கால் சாலை யை சேர்ந்தவர் விஜயக்கு மார் (வயது 34). கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பெயி ண்டராக வேலை பார்த்து வந்தார்.

    விஜயக்குமாருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட விபத்தில் உடல்நி லை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் விஜயக்குமாருக்கு தொட ர்ந்து வலி இருந்து வந்து ள்ளது. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயக்குமார் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த விஜயக்குமாரின் மனைவி சத்யா, விஜயக்குமாரை மீட்டு முத லுதவி சிகிச்சைக்காக கோ பி அரசு மருத்துவமனை யில் சேர்த்தார்.

    பின்னர் மே ல்சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலை யில் அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பெரியார் தெருவை சேர்ந்தவர் முனேஷ் (28). பெயிண்டர். இவரது மனைவி தரணி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் முனேஷ் சிறு வயது முதல் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி மூச்சு விடவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டுக்கு வந்த முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவீர சிகிச்சை பிரிவில் இருந்த முனேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×