search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன் மாணிக்கவேல்"

    சிலை கடத்தல் வழக்கில் பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜரானார்கள். #Statuesmuggling

    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிகளான ரன்வீர்ஷாவின் சைதாப்பேடை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கல் தூண்கள், சிலைகள் ஆகியவையும் சிக்கின. இது தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் 2 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை

    கிரண்ராவின் அலுவலக மேலாளர் செந்தில், ஊழியர் தீனதயாளன் உள்ளிட்ட சிலருக்கும். சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று செந்தில், தீனதயாளன் இருவரும் இன்று கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிலைகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை இன்று போலீசார் ஆய்வு செய்தனர். #Statuesmuggling

    மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பழமையான 100 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Idols #RanveerShah #PonManickavel
    மேல்மருவத்தூர்:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த வாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு குவியல் குவியலாக பழமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள், பிரமாண்டமான சாமி சிலைகள் உள்ளிட்டவை இருந்தது. மொத்தம் 91 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

    இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக எங்கெல்லாம் வீடுகள், பங்களாக்கள் உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் திருவாரூர் மற்றும் திருவையாறில் அவருக்கு 2 அரண்மனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சோதனை நடத்தி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் பண்ணை வீடுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 3-வது முறையாக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலும் ஏராளமான சிலைகள் சிக்கி உள்ளது மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

    மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகல்வாடி கிராமத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் போலீஸ் படையுடன் புகுந்தார்.

    அங்கு ஏராளமான அறைகள் இருந்தன. அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போல பழமை வாய்ந்த கற்சிலைகள் இருந்தன.

    பண்ணை வீடு முழுவதும் 89 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த சிலைகளையும் வைத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.


    மேல்மருவத்தூர் வீட்டில் மதியம் 12.45 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அதன் பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் படப்பை வீட்டுக்கு சென்று சோதனை நடத்துகிறார்.

    படப்பையில் உள்ள வீட்டில் ரன்வீர்ஷா சிலைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நடத்தப்படும் சோதனை நிறைவடைந்த பின்னரே எத்தனை சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

    ரன்வீர்ஷாவின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதே போல கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் ஆசாமி ஒருவரும் ரன்வீர்ஷாவுக்கு சிலைகளை விற்றுள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளும் அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? இல்லை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனவே ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருக்கும் அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idols #RanveerShah #PonManickavel
    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஏன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது? என தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது. #IdolTheftCase #CBI
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொன் மாணிக்க வேல் தனது விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

    தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்பட்டது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதிலை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளது.

    அதில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. டிஜிபி நடத்தும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் வருவது இல்லை. சிலை கடத்தல் முறைகேடில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளதால், நியாமான விசாரணை நடக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிர்பந்தத்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×