search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்வீர்ஷா"

    தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #RanvirShah
    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவரது தோழியும் பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ஏராளமான சாமி சிலைகள், பழமையான தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஏற்கனவே கைதான தொழில் அதிபர் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா சிலைகளை வாங்கி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோர்ட்டு அனுமதி பெற்று அதற்கான ஆதாரத்தை காட்டி ரன்வீர்ஷா வீட்டிலும், கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை அருகே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான 2 பண்ணை வீடுகள் உள்ளன. அங்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரன்வீர்ஷா அங்கு சிலைகளை பதுக்கி இருந்தது தெரிய வந்தது. அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவலை கும்பகோணம் கோர்ட்டிலும் போலீசார் தெரிவித்தார்கள். மொத்தம் 244 சிலைகள் மற்றும் கல் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாகவே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2 வாரமாக எந்தவித சோதனையிலும் ஈடுபடாமல் இருந்தனர். எனவே ரன்வீர்ஷா வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்ததாக கருதப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பி.எஸ். அப்பேரல்ஸ் எனப்படும் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நந்தி, கருடன் உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஏற்கனவே தங்களிடம் உள்ள சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர்ஷா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் கூறுகையில், “மிகவும் தொன்மையான மற்றும் பழமையான சிலைகளை வாங்கி வைத்திருப்பது குற்றம். அதை விற்பனை செய்வதும் குற்றம் என்று தெரிவித்து இருந்தனர்.

    எனவே பழமையான சிலைகள் யார்-யாரிடம் வாங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய இன்று சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் அது தொடர்பான ஆவணங்கள் சிக்குமா? என்ற கோணத்திலும் சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது சாமி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


    இன்று நடந்த சோதனை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக ரன்வீர்ஷா தரப்பு வக்கீல் தங்கராசு கூறுகையில், “தேர் பவனி வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தேர் பவனி வாகனங்கள் தொன்மையானது அல்ல என்றார். #RanvirShah

    சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள். #IdolSmugglingCases #RanvirShah
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிப்பவர், தொழில் அதிபர் ரன்வீர்ஷா. இவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பழமையான சிலைகள், கலை நயமிக்க கல்தூண்கள் உள்பட 91 கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் ‘சம்மன்’ அனுப்பினார்கள். அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடாமல் தடுக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உஷார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் ரன்வீர்ஷாவின் புகைப்படத்துடன் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    தன்னை கைது செய்யாமல் இருக்க தொழில் அதிபர் ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    சம்மன் அனுப்பப்பட்ட ரன்வீர்ஷா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராவார் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி ரன்வீர்ஷா நேரில் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டார். ஆனால் கால அவகாசம் கொடுக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகை ஒன்றில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அந்த விருந்தினர் மாளிகையில் ரன்வீர்ஷாவுக்கு ஒரு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே ஏராளமான சிலைகள் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

    அங்கு 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினார்கள். அங்கு 2 கலைநயமிக்க கல்தூண்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் வெளியே எடுத்தனர். அதில் ஒரு கல்தூண் சிலையோடு சேர்ந்து காணப்பட்டது. மேலும் அங்கு பூமிக்கடியில் ஏராளமான சிலைகளை புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் தோண்டு பணியில் போலீசார் இன்று(சனிக் கிழமை) ஈடுபடுகிறார்கள். #IdolTheft #IdolSmugglingCases #PonManickavel #RanvirShah
    பழமை வாய்ந்த சிலைகளை யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர்:-

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தொடர்பாக தவறு செய்யாத யாரையும் நாங்கள் கைது செய்வது இல்லை. குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபணம் ஆனால் மட்டுமே கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எனவே தவறு செய்யாதவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    அறநிலையத்துறை அதிகாரிகள் 9 பேரை கைது செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.


    ஐகோர்ட்டில் அதிகாரி ஒருவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டாமல் உள்ளோம். பொறுமையாகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு சில பணக்காரர்கள் வீட்டிலும் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பழமையான 100 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Idols #RanveerShah #PonManickavel
    மேல்மருவத்தூர்:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த வாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு குவியல் குவியலாக பழமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள், பிரமாண்டமான சாமி சிலைகள் உள்ளிட்டவை இருந்தது. மொத்தம் 91 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

    இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக எங்கெல்லாம் வீடுகள், பங்களாக்கள் உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் திருவாரூர் மற்றும் திருவையாறில் அவருக்கு 2 அரண்மனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சோதனை நடத்தி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் பண்ணை வீடுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 3-வது முறையாக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலும் ஏராளமான சிலைகள் சிக்கி உள்ளது மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

    மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகல்வாடி கிராமத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் போலீஸ் படையுடன் புகுந்தார்.

    அங்கு ஏராளமான அறைகள் இருந்தன. அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போல பழமை வாய்ந்த கற்சிலைகள் இருந்தன.

    பண்ணை வீடு முழுவதும் 89 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த சிலைகளையும் வைத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.


    மேல்மருவத்தூர் வீட்டில் மதியம் 12.45 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அதன் பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் படப்பை வீட்டுக்கு சென்று சோதனை நடத்துகிறார்.

    படப்பையில் உள்ள வீட்டில் ரன்வீர்ஷா சிலைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நடத்தப்படும் சோதனை நிறைவடைந்த பின்னரே எத்தனை சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

    ரன்வீர்ஷாவின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதே போல கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் ஆசாமி ஒருவரும் ரன்வீர்ஷாவுக்கு சிலைகளை விற்றுள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளும் அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? இல்லை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனவே ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருக்கும் அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idols #RanveerShah #PonManickavel
    சுமார் 91 கோவில் சிலைகளை திருட்டுத்தனமாக வைத்திருந்த தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான தஞ்சையில் உள்ள அவரது அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார். #IdolTheft #RanvirShah
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா பழைமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் அங்கிருந்த சிலைகள் அனைத்து கைப்பற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமாக பழைமையான அரண்மனைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி பாலம் வலது கரையில் இந்த அரண்மனை உள்ளது. மராட்டிய மன்னர் சரபோஜிக்கு சொந்தமான இந்த அரண்மனையை ரன்வீர்ஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். இதன் மதிப்பு பல கோடி ஆகும்.


    அரண்மனைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் பழங்காலத்தில் சுரங்கப்பாதை இருந்துள்ளது. தற்போது இந்த சுரங்கப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷா அரண்மனை தற்போது பூட்டப்பட்டு உள்ளது. காவலாளி ஒருவர் மட்டும் இருந்து அரண்மனையை பாதுகாத்து வருகிறார். வெளிஆட்கள் யாரும் அரண்மனைக்குள் செல்ல முடியாது.

    தற்போது சிலை கடத்தலில் சிக்கியுள்ள ரன்வீர்ஷா, இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மற்றும் பழங்கால மன்னர்கள் காலத்தை சேர்ந்த மூலிகையிலான ஒவியங்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று காலை 11 மணியளவில் திருவையாறு வந்தார். அங்கு ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனை இடத்தை பார்வையிட்டார். அரண்மனை வளாகம் முழுவதும் அவர் சுற்றி பார்த்தார். சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த அவர் பின்னர் புறப்பட்டு சென்றார்.

    திருவையாறு அரண்மனையில், கோர்ட்டு அனுமதி பெற்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனை செய்வார்கள் என தெரிகிறது. அதன்பிறகு திருவையாறு அரண்மனை பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #IdolTheft #IdolWingTeam #RanvirShah #PonManickavel
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் திருவாரூர் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. #IdolWingRaids #PonManickavel
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எப்படி? யாரால் திருடப்பட்டது? இவரிடம் விற்பனை செய்தது யார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சிலை திருட்டுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

    இது தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மாலைமலர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-

    ரன்வீர்ஷாவுக்கு இந்த சிலைகள் யார் மூலமாக எப்படி வந்தது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் எப்படியும் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கும் என்பதால் முழு அளவில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    எங்களது கை காசில் இருந்தே சிலைகளை எடுத்துச் சென்றுள்ளோம். வழக்கு செலவுக்காக முதலில் செலவு செய்து விட்டு பின்னர் எழுதி வாங்கும் நிலை போலீசில் மாற வேண்டும்.

    இந்த சிலைகளை ரன் வீர்ஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான சிலைகளை ரன்வீர்ஷா தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளார்.

    சிலைகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவோம். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolWingRaids #PonManickavel
    ×