search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur temple"

    • ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
    • ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

    இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.

    இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கும் இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து இன்று மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேரும். பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.

    ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தின்போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 500 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்ச க்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். மக்கள் அதிகம் கூடுவதால் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்தல், அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருவாரூரில் 4-வது நாளாக 560 சிலைகளின் உலோக தன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple

    திருவாரூர்:

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளின் தன்மை பற்றி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்யும் படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து சிலைகளின் உண்மை தன்மை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக தஞ்சை பெரிய கோவில், மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தனர். நவீன கருவிகளை கொண்டு இந்த சோதனை நடந்தது. மேலும் கோவிலில் உள்ள பழைய ஆவணங்கள்படி சிலைகளின் உயரம், எடை, உலோகத்தின் தன்மை இருக்கிறதா? என்று ஆய்வு செய்து அதை குறிப்பெடுத்து கொண்டனர்.

    திருவாரூர் கோவிலில்

    இதையடுத்து திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல்கட்டமாக சிலைகள் ஆய்வு பணிகள் தொடங்கின.

    கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 4635 சிலைகளை சோதனை செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 2-வது கட்டமாக திருவாரூர் கோவிலில் மீண்டும் ஆய்வு பணி நடைபெற்றது. நேற்றுடன் 3-வது நாளாக நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை மொத்தம் 560 சிலைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.

    சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மலைச்சாமி, பழனிவேல் ஆகியோர் தலைமையில் தொல்லியல் துறையினர் , சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என 50-க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த பணிகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் சிலைகள் ஆய்வு பணி இன்றும் 4-வது நாளாக தொடர்கிறது.

    இன்று தொல்லியல் துறையினர், தாங்கள் தங்கியிருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இதில் தொல்லியல் துறையினர், தாங்கள் திருவாரூர் கோவிலில் குறிப்பெடுத்த சிலைகளின் தன்மைகளை, பழைய ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ஆய்வு செய்த 560 சிலைகளின் உண்மையான விவரங்களை அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று 2-வது கட்டமாக சிலை கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple
    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோவில்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் பிரிவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் 4,359 -க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் திருவாரூர் , தஞ்சாவூர் , நாகப்பட்டினம், கடலூர். மாவட்டங்களில் உள்ள 626 சிறிய கோவில்களுக்குரிய ஐம்பொன் சிலைகள் ஆகும்.

    இந்தநிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் கடந்த 21-ந் தேதி முதல் ஆய்வு நடைபெற்றது.

    இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று 2-வது கட்டமாக சிலை கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கோவிலில் உள்ள பழங்கால சிலைகள், கற்தூண்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கோவில் ஆவணங்களில் உள்ளப்படி சிலைகள் உள்ளதா? என்று நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன்படி இன்று காலை சிலைகள் கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் , தொல்லியல் துறை மண்டல இணை இயக்குனர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழுவினர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று நடைபெற்று வரும் சிலைகள் ஆய்வை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பார்வையிட்டார்.

    முன்னதாக நேற்று தஞ்சை மாவட்டம் அய்யம் துறை கிராமத்தில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தயாநிதீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.

    தனது மெய்க் காவலர்களுடன் தனியாக வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோவிலின் உள்ளே சென்று வெளியாட்கள் யாரும் உள்ளே வராதபடி கதவுகளை சாத்த உத்தரவிட்டார். இதையடுத்து கோவிலின் பாதுகாப்பு அறையில் உள்ள உலோகம் மற்றும் கல் சிலைகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் கோவில் குருக்கள் ராஜிவிடம் பாதுகாப்பாக உள்ள சிலைகள் பற்றி விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கிராம மக்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து இந்த கோவிலின் பழமை பற்றியும் அதில் தற்போது ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்றும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பொது மக்களிடம் பேசியதாவது:-

    தினமும் பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் கோவிலில் உள்ள சுவாமி சிலைகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார்.

    பிறகு கோவில் ஊழியர்களிடம் பேசிய அவர், இந்த கோவில் சிலைகள் பாதுகாப்பாக உள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்புடன் சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். #ArchaeologyDepartment #Tiruvarurtemple
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் திருவாரூர் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. #IdolWingRaids #PonManickavel
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எப்படி? யாரால் திருடப்பட்டது? இவரிடம் விற்பனை செய்தது யார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சிலை திருட்டுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

    இது தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மாலைமலர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-

    ரன்வீர்ஷாவுக்கு இந்த சிலைகள் யார் மூலமாக எப்படி வந்தது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் எப்படியும் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கும் என்பதால் முழு அளவில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    எங்களது கை காசில் இருந்தே சிலைகளை எடுத்துச் சென்றுள்ளோம். வழக்கு செலவுக்காக முதலில் செலவு செய்து விட்டு பின்னர் எழுதி வாங்கும் நிலை போலீசில் மாற வேண்டும்.

    இந்த சிலைகளை ரன் வீர்ஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான சிலைகளை ரன்வீர்ஷா தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளார்.

    சிலைகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவோம். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolWingRaids #PonManickavel
    ×