search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலதிபர் ரன்வீர்ஷா அரண்மனையில் பொன்மாணிக்கவேல் ஆய்வு
    X

    தொழிலதிபர் ரன்வீர்ஷா அரண்மனையில் பொன்மாணிக்கவேல் ஆய்வு

    சுமார் 91 கோவில் சிலைகளை திருட்டுத்தனமாக வைத்திருந்த தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான தஞ்சையில் உள்ள அவரது அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார். #IdolTheft #RanvirShah
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா பழைமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் அங்கிருந்த சிலைகள் அனைத்து கைப்பற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமாக பழைமையான அரண்மனைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி பாலம் வலது கரையில் இந்த அரண்மனை உள்ளது. மராட்டிய மன்னர் சரபோஜிக்கு சொந்தமான இந்த அரண்மனையை ரன்வீர்ஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். இதன் மதிப்பு பல கோடி ஆகும்.


    அரண்மனைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் பழங்காலத்தில் சுரங்கப்பாதை இருந்துள்ளது. தற்போது இந்த சுரங்கப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷா அரண்மனை தற்போது பூட்டப்பட்டு உள்ளது. காவலாளி ஒருவர் மட்டும் இருந்து அரண்மனையை பாதுகாத்து வருகிறார். வெளிஆட்கள் யாரும் அரண்மனைக்குள் செல்ல முடியாது.

    தற்போது சிலை கடத்தலில் சிக்கியுள்ள ரன்வீர்ஷா, இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மற்றும் பழங்கால மன்னர்கள் காலத்தை சேர்ந்த மூலிகையிலான ஒவியங்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று காலை 11 மணியளவில் திருவையாறு வந்தார். அங்கு ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனை இடத்தை பார்வையிட்டார். அரண்மனை வளாகம் முழுவதும் அவர் சுற்றி பார்த்தார். சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த அவர் பின்னர் புறப்பட்டு சென்றார்.

    திருவையாறு அரண்மனையில், கோர்ட்டு அனுமதி பெற்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனை செய்வார்கள் என தெரிகிறது. அதன்பிறகு திருவையாறு அரண்மனை பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #IdolTheft #IdolWingTeam #RanvirShah #PonManickavel
    Next Story
    ×