search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்
    X

    சிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்

    சிலை கடத்தல் வழக்கில் பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜரானார்கள். #Statuesmuggling

    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிகளான ரன்வீர்ஷாவின் சைதாப்பேடை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கல் தூண்கள், சிலைகள் ஆகியவையும் சிக்கின. இது தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் 2 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை

    கிரண்ராவின் அலுவலக மேலாளர் செந்தில், ஊழியர் தீனதயாளன் உள்ளிட்ட சிலருக்கும். சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று செந்தில், தீனதயாளன் இருவரும் இன்று கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிலைகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை இன்று போலீசார் ஆய்வு செய்தனர். #Statuesmuggling

    Next Story
    ×