search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மக்கள்"

    • கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்து விளக்கினர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் இணைந்து மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்தும், அரசு அறிவுறுத்தும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், மருத்துவ அலுவலர் சேது, கிராம சுகாதார செவிலியர் மாலதி, சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பாளர்கள் நித்தேஷ், பிரபாகரன், அன்னலட்சுமி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
    • சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கடும் குளிர்வாட்டி எடுக்கிறது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் மழையும் குளிருடன் சேர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பேர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளுக்கு வறட்டு இருமலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவ–மனைகளிலும் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, இரவில் நிலவும் கடும் குளிர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க கம்பளி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

    மேலும் காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைக்கும் வகையிலான குல்லா உள்ளிட்டவைகளை அணிந்து செல்லலாம்.

    காது மற்றும் மூக்கு வழியாகவே பனிக்காற்று உடலில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. இதைப்போல் நீரை காய்ச்சி குடிப்பதும் நல்லது என்றனர். 

    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன.

    பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு களை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும்.
    • குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    நாகர்கோவில், அக்.13-

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுத் துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறச்சகுளம், தெரிசனங் கோப்பு, ஞாலம், சிறமடம், அருமநல்லூர் மற்றும் கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், கேசவன்பு தூர், தடிக் காரன்கோணம், கீரிப்பாறை போன்ற பகுதி களிலிருந்து பெரும்பா லான மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அரசு பேருந்து மூலமே நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் நிறுத் தப்பட்ட பஸ்கள், தற்போ தும் முறையாக இயக்கப் படாமல் உள்ளன. இரவு நேர பஸ்களை நிறுத்தி யதுடன் அடிக்கடி காலை மற்றும் மாலை நேரங் களிலும் பஸ்கள் ரத்து செய்யப் படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இறச்சகுளம்-சாமி தோப்பு தடம் எண் 32 பஸ் பல மாத காலமாக நிறுத் தப்பட்டுள்ளது. இப்பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்ற பொதுமக்கள் வசதிக்காக தினமும் காலை 8.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த இறச்சகுளம் - நாகர்கோவில் சிறப்பு பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜாக்க மங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்ட மணக்குடி, பொழிக் கரை, பள்ளம், புத்தன்துறை போன்ற மீனவ கிராம பகுதிகளுக்கு இயக்குப்பட்டு வந்த அரசு பேருந்துகள் முறையாக இயக்கப் படவில்லை. பொழிக்கரை நாகர்கோவில் தடம் எண் 38சி பஸ்சை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும். குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
    • தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திரா நகர் பகுதி மக்கள் நேற்று ஊர்வலமாக வந்து விருத்தாசலம் ஏ.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர். ஆக்ரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் இருந்து, கோரிக்கை பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக, விருத்தாசலம் போலீஸ் நிலையம் வந்தனர்.அங்கு ஏ.எஸ்.பி. அங்கித் ஜெயினிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. மாற்று இடம் எதுவும் தங்களுக்கு இல்லாததால் போக்கிடம் செல்ல முடியாமல் பிள்ளை குட்டிகளோடு தவிப்பதாகவும், தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் எங்கள் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டும்.மேலும் அந்த தனிநபர் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டி வந்தார், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.  மனுவை பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • தஞ்சை ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
    • இது தவிர பெரும்பாலான ஆட்டோக்கள், பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    நாட்டின் 75 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதனை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    அதன்படி நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றி உள்ளனர்.

    தஞ்சையில் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறப்பதை காண முடிந்தது. தேசியக்கொடி அலங்காரங்களால் வீடுகள் மின்னின.

    இதேபோல் தஞ்சையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டன. தஞ்சை ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இது தவிர பெரும்பாலான ஆட்டோக்கள், பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதே போல் தனியார் நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களிலும் தேசிய கொடிகளை பறக்க விட்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக சாலையோரம் வசிக்கும் பொது மக்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தகவல் அறிந்ததும் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் கிராமத்தில் கிராமநிர்வா கஅலுவலர்அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகம் நடுகுப்ப ம்கிராமத்திற்குமாற்றபட உள்ளதாக கிராமஊழியர்ஒருவர் தனதுமுகநூலில்பதிவிட்டு இருந்ததாககூறப்படுகிறது. ஆத்திரமடைந்தகிராம மக்கள்,கிராமநிர்வாக அலுவலர்அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர்வல்லம்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்முத்தாண்டிகுப்பம் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தை மாற்றுவதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்ப டவில்லைவதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொது மக்கள்போராட்டத்தை விளக்கி க்கொ ண்டனர்இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

    • பண்ருட்டியில் பொதுமக்களுடன் இணைந்து தீவிர சுகாதார பணியில் ஈடுபட வேண்டும் என நகராட்சி தலைவர் பேசினார்.
    • தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சியில் எனது குப்பை, எனது பொறுப்பு'என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் 4-வது வார்டில் நடந்தது. இதில் பண்ருட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    எல்லோரும் சுத்தத்தைப் பற்றி பேசலாம்; ஆனால் செயல் என்று வரும்போது,ஒவ்வொரு நகரிலும் வீட்டுக் குப்பையை தெருவில் எறிகிறவர்களாகதான் இருக்கிறோம் இதனால் நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாய் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்கின்ற விதத்தில் நகரங்களில் துாய்மைக்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

    இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ் வாறு அவர் பேசினார்.

    கமிஷனர் மகேஸ்வரி, அரசு பள்ளிபெற்றோர் ஆசிர்யர் கழக தலைவரும்,தொழில் அதிபருமான ஜாகீர் உசேன்,வார்டு கவுன்சிலர் சாந்தி செந்தில், அரிசி மண்டி அதிபர்ரகுஉள்ளிட்டோர்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.

    தொடர்ச்சியாக, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தில், பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டிய அவசியம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்,

    ×