search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு
    X

    விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு

    • விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
    • தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திரா நகர் பகுதி மக்கள் நேற்று ஊர்வலமாக வந்து விருத்தாசலம் ஏ.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர். ஆக்ரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் இருந்து, கோரிக்கை பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக, விருத்தாசலம் போலீஸ் நிலையம் வந்தனர்.அங்கு ஏ.எஸ்.பி. அங்கித் ஜெயினிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. மாற்று இடம் எதுவும் தங்களுக்கு இல்லாததால் போக்கிடம் செல்ல முடியாமல் பிள்ளை குட்டிகளோடு தவிப்பதாகவும், தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் எங்கள் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டும்.மேலும் அந்த தனிநபர் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டி வந்தார், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×