search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffer from"

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
    • சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கடும் குளிர்வாட்டி எடுக்கிறது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் மழையும் குளிருடன் சேர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பேர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளுக்கு வறட்டு இருமலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவ–மனைகளிலும் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, இரவில் நிலவும் கடும் குளிர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க கம்பளி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

    மேலும் காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைக்கும் வகையிலான குல்லா உள்ளிட்டவைகளை அணிந்து செல்லலாம்.

    காது மற்றும் மூக்கு வழியாகவே பனிக்காற்று உடலில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. இதைப்போல் நீரை காய்ச்சி குடிப்பதும் நல்லது என்றனர். 

    ×