பண்ருட்டி அருகே கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள்திரண்டதால் பரபரப்பு

பண்ருட்டி அருகே கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்ததும் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள் திரண்ட காட்சி. 
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள் திரண்ட காட்சி. 
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் கிராமத்தில் கிராமநிர்வா கஅலுவலர்அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகம் நடுகுப்ப ம்கிராமத்திற்குமாற்றபட உள்ளதாக கிராமஊழியர்ஒருவர் தனதுமுகநூலில்பதிவிட்டு இருந்ததாககூறப்படுகிறது. ஆத்திரமடைந்தகிராம மக்கள்,கிராமநிர்வாக அலுவலர்அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர்வல்லம்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்முத்தாண்டிகுப்பம் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தை மாற்றுவதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்ப டவில்லைவதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொது மக்கள்போராட்டத்தை விளக்கி க்கொ ண்டனர்இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

X

Maalai Malar
www.maalaimalar.com