search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரபணி"

    • பண்ருட்டியில் பொதுமக்களுடன் இணைந்து தீவிர சுகாதார பணியில் ஈடுபட வேண்டும் என நகராட்சி தலைவர் பேசினார்.
    • தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சியில் எனது குப்பை, எனது பொறுப்பு'என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் 4-வது வார்டில் நடந்தது. இதில் பண்ருட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    எல்லோரும் சுத்தத்தைப் பற்றி பேசலாம்; ஆனால் செயல் என்று வரும்போது,ஒவ்வொரு நகரிலும் வீட்டுக் குப்பையை தெருவில் எறிகிறவர்களாகதான் இருக்கிறோம் இதனால் நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாய் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்கின்ற விதத்தில் நகரங்களில் துாய்மைக்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

    இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ் வாறு அவர் பேசினார்.

    கமிஷனர் மகேஸ்வரி, அரசு பள்ளிபெற்றோர் ஆசிர்யர் கழக தலைவரும்,தொழில் அதிபருமான ஜாகீர் உசேன்,வார்டு கவுன்சிலர் சாந்தி செந்தில், அரிசி மண்டி அதிபர்ரகுஉள்ளிட்டோர்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.

    தொடர்ச்சியாக, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தில், பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டிய அவசியம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்,

    ×