search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பிரீமியர் லீக்"

    • ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 80 ரன்கள் விளாசினார்.
    • அலிசா ஹீல் 38 பந்தில் 55 ரன்கள் விளாசிய போதிலும் உ.பி. வாரியர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

    5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். எலிஸ் பெர்ரியும் அரைசதம் (58 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார்.

    அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி களத்தில் நின்றது வரை அவர்களுக்கு நம்பிக்கை காணப்பட்டது. ஹீலி 55 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு (8 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

    ஸ்மிரிதி மந்தனா

    20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி. வாரியர்ஸ் அணியின் 3-வது தோல்வி இதுவாகும்.

    இத்துடன் பெங்களூரு சுற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே தொடக்க லீக்கில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • ஜெஸ் ஜோனாஸ்சன் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். அலிஸ் கேப்சி 17 பந்தில் 27 ரன்களும், சதர்லேண்டு 12 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். குஜராத் டைட்டன்ஸ் வீராங்கனை மேக்னா சிங் 4 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 53 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஆஷ்லே கார்டனர் 31 பந்தில் 40 ரன்கள் அடித்தார். என்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாஸ்சன் 3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஜெஸ் ஜோனாஸ்சன்

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 போட்டிகள் முடியவில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ் 47 பந்தில் 55 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 22 பந்தில் 26 ரன்கள் அடித்தார். உ.பி. வாரியர்ஸ் அணி சார்பில் அஞ்சலி சர்வானி, கிரேஸ் ஹாரிஸ், எக்லெஸ்டோன், தீப்தி சர்மா, கயக்வாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலிசா ஹீலி 29 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கிரண் நவ்கிர் 31 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசி நெருக்கடியை குறைத்தார்.

     தஹிலா மெக்ராத் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த கிரேஸ் ஹாரிஸ் 17 பந்தில் 38 ரன்களும், தீப் சர்மா 20 பந்தில் 27 ரன்களும் ஆட்டமிழக்காமல் விளாச உ.பி. வாரியர்ஸ் 16.3 பந்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியடைந்து 4-வது இடத்தில் உள்ளது.

    ஆர்சிபி அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 3-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் கடைசி இடத்திலும் உள்ளது.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லி அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டும், மேரிஜான் காப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.

    சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
    • குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.

    மும்பை சார்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    4 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 157 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிச்சா கோஷ் 62 ரன்னும், மேகனா 53 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றிபெற்றது.

    5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீராங்கனை சோபனா ஆஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

    • ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    • பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்துள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் 2023 சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரும் ஆர்சிபி அணி வீரருமான பெர்ரியிடம், உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரில் யாரை தேர்வு செய்யவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

    கோலிக்கும் டோனிக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடினமான பணிகளில் ஒன்றாக இருக்கும். இதற்கு அவர் தந்திரமான ஒரு பதிலை அளித்துள்ளார்.

    இருவரையும் தேர்வு செய்து, அவர்கள் விளையாடுவதை வெளியில் இருந்து பார்ப்பேன் என கூறினார்.

    கேள்வி: தொடக்க ஆட்டக்காரராக கோலி அல்லது டோனி யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

    பெர்ரி: நான் இருவரையும் தேர்ந்தேடுத்துகிறேன்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று குஜராத் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.

    பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×