search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பிரீமியர் லீக்"

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
    • டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    இந்நிலையில் கோப்பை வென்ற ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் சாம்பியன் கோப்பையுடன் அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது.

    இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

    • இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம்.
    • வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று மந்தனா கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணிக்கு 114 ரன் இலக்காக இருந்தது.

    ஷபாலி வர்மா அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன் எடுத்தார். ஸ்ரேயங்கா பட் டேல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    எலிஸ்பெரி 35 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும், சோபி டேவின் 32 ரன்னும் எடுத்தனர். சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் கிடைத்தன.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    ஐ.பி.எஸ். போட்டியில் விராட் கோலியை கொண்ட ஆர்.சி.பி. அணி இதுவரை கோப்பையை வென்றது இல்லை. 16 ஆண்டுகளில் 3 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    ஆனால் பெண்கள் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.

    கோப்பையை வென்றதால் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய பாடம் கற்றோம்.

    அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 'ஈ சாலா கப் நம்தே' என சொல்வது உண்டு. இப்போது கோப்பை நமது வசம் (ஈ சாலா கப் நம்து)

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

    • எலிஸ் பெர்ரி அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார்.
    • ஷ்ரேயங்கா பாட்டீல் பர்பிள் தொப்பி மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்றார்.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த வரும் அறிமுகமானது. ஐந்து அணிகள் கொண்ட அறிமுகமான முதல் தொடரில் 4-வது இடம் பிடித்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    ஆனால் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கியது. கடந்த முறை புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இரண்டு முறை லீக் சுற்றில் தொல்வியடைந்தது. என்றாலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி, கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையை எலிமினேட்டர் சுற்றில் வெறியேற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப் போட்டியில் ஷ்ரேயங்கா பாட்டீல் அபாரமாக பந்து வீச டெல்லி அணி 113 ரன்னில் சுருண்டது. எலிஸ் பெர்ரி அபாரமாக பேட்டிங் செய்த கடைசி ஓவரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டத்துடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பி, வளர்ந்து வீரம் வீராங்கனை விருது, ஃபேர் பிளே விருது என நான்கு விருதுகளையும் ஆர்சிபி வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.

    எலிஸ் பெர்ரி

    9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை வென்றார். அவரது ஸ்கோரில் 41 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். சராசரி 69.4 ஆகும். டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 4 அரைசதங்களுடன் 331 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார்.

     ஷ்ரேயங்கா பாட்டீல்

    ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும், மோலினிக்ஸ் 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

    ஷ்ரேயங்கா வளர்ந்து வரும் வீராங்கனை விருதையும் வென்றார். உ.பி. வாரியர்ஸ் அணியின் தீப்தி சர்மா இந்த தொடரின் மதிப்புமிக்க வீராங்கனை என்ற விருதை வென்றார்.

    மொத்தமாக ஏறக்குறைய அனைத்து விருதுகளும் ஆர்சிபி வீராங்கனைகள் சுருட்டினர்.

    • எலிஸ் பெர்ரி 9 போட்டிகளில் 347 ரன்கள் விளாசினார்.
    • ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    பெண்களுக்கான பிரீமியர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் லீக்கில் ஆர்சிபி பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதனால் அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டி வருகிறார்கள்.

    இந்த தொடரில் ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை வென்றார். அவரது ஸ்கோரில் 41 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். சராசரி 69.4 ஆகும். டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 4 அரைசதங்களுடன் 331 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார்.

    எலிஸ் பெர்ரி

    அதேபோல் பந்து வீச்சிலும் ஆர்சிபி வீராங்கனைகள் அசத்தினர். ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும், மோலினிக்ஸ் 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

    • ஷோபி டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
    • எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார்.

    பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசனின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மான அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கன மெக் லேனிங் 23 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. அதன்பின் 52 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் சோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஷ்ரேயாங்கா பாட்டில் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா- ஷோபி டிவைன் ஆகியோர் நிதானமாக விளையாடினர். குறைந்த இலக்கு என்பதால் ஆட்டத்தில் வேகம் காட்டவில்லை.

    அணியின் ஸ்கோர் 8.1 ஓவரில் 49 ரன்களாக இருக்கும்போது டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் எலிஸ் பெர்ரி களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் மந்தனா அதிரடி ஆட்டத்தை தொடங்க நினைக்கும்போது 39 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அப்போது ஆர்சிபி 15 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது, எலிஸ் பெர்ரி உடன் ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர்.

    ஆர்சிபி வீராங்கனைகள் வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். ஆர்சிபி அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் கிடைத்தது. 3-வது பந்தை ரிச்சா கோஷ் பவுண்டரிக்கு விரட்ட ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 14 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கியது. 2-வது சீசனான இதில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • உ.பி. வாரியர்ஸ் அணிக்கெதிராக அடித்த சிக்ஸ் பரிசளிக்க நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை தாக்கியது.
    • உடைந்த கண்ணாடியை டாடா ஃபிரேம் செய்து எலிஸ் பெர்ரிக்கு பரிசாக அளித்துள்ளது.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4-ந்தேதி சின்னசாமி மைதானத்தில் மோதின. அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த காரின் கண்ணாடியை தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து சிதறியது.

    இந்த நிலையில் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், உடைந்த கார் காண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு டாடா பரிசாக அளித்துள்ளது. அத்துடன் அதில் "பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயதான எலிஸ் பெர்ரி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்த சீசனிலா் எலிஸ் பெர்ரி 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக எலிமினேட்டர் போட்டியில் 50 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.
    • மும்பை அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்தில் 33 ரன்களும், அமெலியா கெர் 25 பந்தில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆர்சிபி வீராங்கனைகள் விரைவாக ரன்கள் சேர்க்க திணறினர். தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (10), சோபி டிவைன் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டத்தால் ஆர்சிபி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    எலிஸ் பெர்ரி

    பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணி வீராங்கனைகளும் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர். தொடக்க வீராங்கனை யாஸ்திகா பாட்டியா 27 பந்தில் 19 ரன்களும், ஹெய்லே மேத்யூஸ் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்தில் 33 ரன்களும், அமெலியா கெர் 25 பந்தில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

    • முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி துவங்கியது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    லீக் பிரிவின் கடைசி போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

     


    இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மார்ச் 17-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். 

    • முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியால் 126 ரன்களே அடிக்க முடிந்தது.
    • டெல்லி அணியின் ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் மூன்று வீராங்கனைகளான வோல்வார்த் (7), மூனி (0), ஹேமலதா (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    6-வது பேட்டராக களம் இறங்கிய பாரதி ஃபுல்மாலி 36 பந்தில் 42 ரன்கள் அடித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் மரிஜான்னே காப், ஷிகா பாண்டே, மினு மானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை மெக் லேனிங் 18 பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிஸ் கேப்சி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையாக ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 13.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆர்சிபி 3-வது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களையும் பிடித்த இந்த மூன்று அணிகளும பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    • மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
    • டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

    டெல்லி:

    2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    அந்த வகையில், டெல்லியில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
    • உ.பி. அணியின் தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 88 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வோல்வார்த் 30 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். உ.பி. வாரியர்ஸ் அணியின் எக்லேஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 4 ரன்னிலும், கிரண் நவ்கிர், சமரி அட்டப்பட்டு ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த தீப்தி சர்மா ஒருபுறம் நிற்க அதன்பின் வந்த கிரேஷ் ஹாரிஸ் 1 ரன்னிலும், ஷ்வேதா ஷெராவத் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்த உ.பி. வாரியர்ஸ் 35 ரன்கள் எடுப்பதற்குள் 5 விககெட்டுகளை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மா உடன் பூனம் கெமர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தீப்தி சர்மா 60 பந்தில் 88 ரன்களும், பூனம் கெமர் 36 பந்தில் 36 ரன்களும் ஆட்டம் இழக்காமல் எடுத்த போதிலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    அந்த அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி, உ.பி. வார்யர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    ஆர்சிபி இன்று மும்பையை எதிர்கொள்கிறது. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நாளை டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று, ஆர்சி இன்று தோல்வியடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் முன்னேறும்.

    இன்று ஆர்சிபி வெற்றி பெற்று, நாளை குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றால் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ ஆகிய இரண்டு அணிகள் ஒன்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியடைந்தால் ஆர்சிபி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    • டெல்லி அணியின் ரோட்ரிக்ஸ் 36 பந்தில் 58 ரன்களும், அலிஸ் கேப்சி 32 பந்தில் 48 ரன்களும் விளாசினர்.
    • ரிச்சா கோஷ் 51 ரன்கள் அடித்தும் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாததால் ஆர்சிபி தோல்வியை சந்தித்தது.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    ரோட்ரிக்ஸ் 36 பந்தில் 58 ரன்களும், அலிஸ் கேப்சி 32 பந்தில் 48 ரன்களும் விளாசினர். ஆர்சிபி அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடங்க வீராங்கனை ஸ்மிரி மந்தனா 5 ரன்னிலும், ஷோபனி மோலினக்ஸ் 33 ரன்னிலும் வெளியேறினர்.

    எலிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி 32 பந்தில் 49 ரன்கள் அடித்தார். விக்கெட் கீபப்ர் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடினார். இதனால் அணி வெற்றியை நெருங்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் ஆர்சிபி அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரிச்சா கோஷ் சிக்ஸ் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் வரவில்லை. 3-வது பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது எதிர் வீராங்கனை திஷா கசத் ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன்கள் அடித்தார்.

    ரோட்ரிக்ஸ்-கேப்சி

    இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ரிச்சா கோஷ் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனா் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

    ரிச்சா அந்த பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பவுன்சராக வீசப்பட்ட பந்து சரியாக பேட்டில் படவில்லை. பீல்டர் கைக்குள் பந்து சென்றாலும் ரிச்சா கோஷ் ஒரு ரன் எடுத்து போட்டியை "டை"யில் முடிக்க முயற்சித்தார். ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் சிறப்பாக பீல்டிங் செய்து ரன்அவுட் ஆக்கினார்கள். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    ரிச்சா கோஷ் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அணியை வெற்றி பெற வைக்க முடியாத கவலையுடன் வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ×