search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தற்கொலை"

    • வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த சின்ன இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் வேதம் (வயது60). திருமணமாகாத அவர் சகோதரர் கருணாகரன் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ். மருத்துவ பிரதிநிதியான இவரது மனைவி ரம்யா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகிறது. 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரம்யா, நேற்று இரவு, மகளின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு, தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி அண்ணனூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆவடி ரெயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகளின் பிறந்தநாள் அன்று தாய் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி

    வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் அருகே உள்ள நடுப்பட்டறைகிராமத்தை சேர்ந்தவர் வள்ளிகண்ணன். இவ ரது மனைவி சரசா (வயது 63). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.இவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையி்ல் மற்ற மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சரசா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத சார் சம்பவ பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் ஜிலானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.
    • போலீசார் ஜிலானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெருவை சேர்ந்தவர் சம்சுஷேக் (வயது 36) சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் வெஸ்ட் முகப்பேரை சேர்ந்த ஜிலானிக்கும் (வயது 35). ஜனவரி மாதம் 26 -ம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நேற்று ஜிலானி கணவருடன் பேசிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அறைக்கு சென்று பார்த்தபோது ஜிலானி புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

    இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சம்சுஷேக் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜிலானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    சம்பவம் குறித்து ஜிலானி தாயார் சிக்கந்தர் பீவி (வயது 60) புகார் அளித்தார். திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் ஜிலானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • தமிழ்ச்செல்வி அடிக்கடி தலைவலியால் துடிதுடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். இங்கு வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பழனி என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    தமிழ்ச்செல்வியின் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும் தமிழ்ச்செல்வி அடிக்கடி தலைவலியால் துடிதுடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தொடர் தலைவலியால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக கடந்த 15-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து அவர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்து தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பொதட்டூர்பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா ராம சமுத்திரம் ஊராட்சியில் உள்ள வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 25). இவர் பொக்லைன் எந்திரம் ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அனு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. முத்துவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனு குடிப்பழக்கத்தை விடும்படி முத்துவிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அனு கணவரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அனு படுக்கை அறைக்கு சென்ற நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டார் அனுவை கீழே இறக்கி உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அனுவின் தந்தை ராஜேந்திரன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்களே ஆவதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 13 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் தச்சராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பரமேஸ்வரனுக்கும் ரம்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரம்யாவிற்கு திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    • தமிழரசிக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் ஒருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
    • தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள பாளையம்பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஜல்லி உடைக்கும் கிரசரில் வாட்ச் மேன் ஆக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 55). இருவருக்கும் திருமணமாகி 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் தமிழரசிக்கும், இவருடைய பக்கத்து வீட்டில் ஒருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழரசி கணவரும், மகனும் இறந்தனர்.

    தமிழரசிக்கு பக்கத்து வீட்டில் உள்ளவரால் தொடர்ந்து அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதில் நேற்று மனவிரக்தி அடைந்த தமிழரசி விஷத்தன்மை கொண்ட இலையை வீட்டில் அடுப்பில் வேக வைத்து தண்ணீரை குடித்தார்.

    இதனால் சுய நினைவில்லாமல் அவர் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த

    இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை கொடுக்க முடியாத வேதனையில் சோக முடிவு
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜேசுராயப்பன் (வயது 60), மீனவர். இவரது மனைவி விஜயா (57). இவர் தனது மகள் திருமணத்துக்காக ரூ.20 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயா இன்று அதிகாலை தனது வீட்டில் ஒரு அறையில் உள்ள உத்திரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
    • முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .

    இதனால் மனமுடைந்த திலகவதி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.

    அவரது உடலை பரிசோதித்த அரசு டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் உறவினர்கள் கதறினர்.

    இது குறித்த முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
    • ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). மகள்கள் சந்திரகலா (33). எம்.பி.ஏ. பட்டதாரி. சவுஜன்யா (29). மாற்றுத்திறனாளி. மகள்கள் இருவருக்கும் திருமணமாகாததால் தனது பெற்றோருடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சூரிய நாராயணாவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படுத்த படுக்கையாக இருந்ததால் வீட்டிற்கு வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி சூரிய நாராயணா இறந்தார்.

    கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார். அந்த வழியாக சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் வீட்டில் உள்ள அறைகளில் தனித்தனியாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது விஜயலட்சுமி மற்றும் அவரது 2 மகள்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விஜயலட்சுமியின் அறையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. போலீசார் கடிதத்தை பறிமுதல் செய்தனர்.

    அதில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கணவர் இறந்து விட்டதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபிகாவிற்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் வேப்பமரத்துகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (வயது25). இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கும், ஓமலூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக பத்திரிக்கை அடித்து பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபிகா வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் சாப்பிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் உடனே அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அப்போது அவர் வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் உடனே அங்கு சென்று தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தீபிகாவிற்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்து உள்ளார்.

    இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில் திருமணத்தில் விருப்பமில்லாததால் தீபிகா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபிகாவிற்கு நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×