search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் அதிகாரி தற்கொலை"

    • இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
    • முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .

    இதனால் மனமுடைந்த திலகவதி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.

    அவரது உடலை பரிசோதித்த அரசு டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் உறவினர்கள் கதறினர்.

    இது குறித்த முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×