search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூத் கமிட்டி"

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஒத்தவீடு கிளை செய லாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் ஊராட்சி பூத் எண். 39, 40-ன் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணி மாறன் முன்னிலை வகித்தார்.

    மானாமதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர், மகளிர் உறுப்பி னர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பான ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, மணலூர் கிளை செயலாளர்கள் வீர மணி, அழகர், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மண லூர் ஒத்தவீடு கிளை செயலாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார்.

    புளியம்பட்டி,

    புஞ்சைபுளியம்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் வார்டு எண் 12, 13 காந்தி நகர் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றும் விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் 17 பூத்கள் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார். பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. முன்னிலையில் நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி மற்றும் அவைத் தலைவர் மயில்சாமி வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. காளியப்பன் மற்றும் நகர, கழக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பவானிசாகர் பேரூர் செயலாளர் துரைசாமி, துரைசாமி, எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மகளிர் அணியைச் சார்ந்த தமிழ்ச்செல்வி வசந்தாமணி, ஆனந்த பிரபா, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், வெற்றிவேல், வேலுச்சாமி, கே.ஜி.சதீஷ், புரட்சி நாகராஜ், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பாபு பொன்னுச்சாமி பாலன் இளைஞர் அணி சக்தி சண்முகம். கண்ணன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சக்திவேல், மட்டன் குணசேகரன் கேபிள் சிவா வினோபாஜி, ராமசாமி, வசந்தா, மாணிக்கம், மார்க்கெட் கார்த்தி பழனிச்சாமி, சிவகுரு, சுப்பிரமணியன், சாமிநாதன், குமார், ஸ்ரீ பாலாஜி, மளிகை மூர்த்தி, ஜோதி மணியன், கிட்டுசாமி, செல்லதுரை, சுரேஷ், கண்ணன், பாபு மற்றும் பூத்கமிட்டி தலைவர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் மற்றும் பூத் கமிட்டி படிவங்களை வழங்கினர். இதில் மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆலோசனைகள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கே.வி.ஆர். நகரில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் வருகின்ற காலங்களில் புதிய வாக்காளர்கள் அதிமுகவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.அதற்கு கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகம் அறிவித்துள்ளபடி பூத் கமிட்டியில் அதிக அளவில் இளைஞர்கள் இடம் பெற வேண்டும்.அதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் அணி நிர்வாகிகள் என ஒரு கலவையான பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் 42-வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • அமைச்சர் காந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், அமுதா, மாவட்ட பொருளாளர் சாரதி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டுவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தல்யொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கழக ஆக்க பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

    டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் பெருந்தகையின் திருவுருவச்சிலை 19-ந் தேதிதிறக்கப்படவுள்ளது.

    கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம் மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிபடுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு நாளில் திருவுருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தி வட்டக்கிளை, ஊர்கிளை பேரூர்கிளை, ஒன்றியம், நகரம் எங்கும் கொண்டாடிடவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் பேராசிரியர் நூற்றாண்டு பொதுகூட்டம் நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்கவேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
    • தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு, தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்குபல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சு.சாமிநாதன் தலைமை தாங்கினார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

    இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆட்டோ குமார், செந்தில்குமார், கலைவாணி சசிகுமார், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், மாவட்ட பிரதிநிதிகள் முத்துகுமாரசாமி, துரைமுருகன், அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் பானுமதி,மற்றும் தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல, பல்லடம் நகர தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ,பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். இந்த கூட்டத்தில்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.ராஜசேகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்,நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன்,வசந்தாமணி,வேலுச்சாமி,குட்டி பழனிச்சாமி,கதிர்வேல்,கவுஸ் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளைகளில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். இளைஞர்களை பூத் கமிட்டியில் உறுப்பினர்களாக சேருங்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்த வீதியில் குடியிருப்பவராகவும், அவருக்கு அந்த வீதியில் உள்ள அனைவரும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். எதிர்காலத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான் கட்சியை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து 3 மாத காலத்தில் முடிக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை நானே வந்து வழங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிகரசுதன், திலகர் நகர் சுப்பு, கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×