என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிறந்தநாள் விழா"
- தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை முன்பு நடைபெற்றது.
- பள்ளி குழந்தைகள் என அனைவரும் கலந்து காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் தொல் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் நினைவு நாள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை முன்பு நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, தலைமை தாங்கினார். தருமபுரி நகர துணைச் செயலாளர் உமா சங்கர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், தருமபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, தருமபுரி நகராட்சி 30 வார்டு வி.சி.க. கவுன்சிலர் விஜயலட்சுமி உமாசங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் அம்பேத்வளவன், ரங்கநாதன் (எ) கரிகாலன், ராமதுரை மற்றும் முகாம் பொறுப்பாளர்களும், துணைநிலை அமைப்பின் பொறுப்பாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் கலந்து காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா வெகுவிமர்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசு வீதியில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பர்கூர் அரசு மருத்துவ–மனையில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் நலத்திட்டத்தினையும் டாக்டர் செல்லக் குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்த விழாவின் போது மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தவர் சேகர், நகர தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, மூத்த வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ்பாபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார்,சேவாத்தள மாவட்டத் தலைவர் தேவராஜ், உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
இதேபோல காங்கிரஸ் கட்சியினர் போச்சம்பள்ளி, ஓசூர், வேப்பனபள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டிணம், நாச்சிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காமராஜரின் உருவச்சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
- நாடார் உறவின்முறை மகளிர் பள்ளியில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.
மதுரை
மதுரை கீரைத்துறை மேலதோப்புத்தெருவில் அமைந்துள்ள மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா நாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைபெறுகிறது.
பள்ளியின் செல்வி விளையாட்டு மைதானத்தில் நடை பெறும் விழாவில் மதுரை பட்டிமன்ற தென்றல் மதுரை ஜோதிகாராஜன் கலந்துகொண்டு மக்கள் மனம் கவர்ந்த நாயகன் என்ற தலைப்பில் சிறப்புரை–யாற்றுகிறார்.
மேலும் விழாவை–யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடு–களை தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன், துணைத் தலைவர்கள் ஜெ.ஜெயசிங், ஏ.ராஜா ராம், செயலாளர் வி.என்.சிவக் குமார், பொருளாளர் ஜெ.தாமரை செல்வன், தலைமை யாசிரியை டி.சரஸ் வதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
- காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது.
- அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான திருநா வுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு பொறுப்புக்குழு உறுப்பினர் பாரனூர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் அரண்மனையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன், பால கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் வாலாந்தரவை டாக்டர் மேகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் தமிழரசன், வீரபாண்டி, பொன்.பெரியார் பாண்டியன், திருப்புல்லாணி வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது யூசுப், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
ராஜபாளையம்
ராமசுப்பிரமணிய ராஜா 88-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, அவரது மகன் பி.வி.அபினவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அபினவ வித்யாதீர்த்த பாரதீ பாடசாலையில் அமைந்துள்ள ராமசுப்பிரமணிய ராஜாவின் திருஉருவ சிலைக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து நினைவு ஜோதி ஓட்டத்தை வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.
நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவு ஊழியர்கள் ஏந்தி வந்தனர். இந்த ஓட்டம் சாரதம்பாள் கோவில் ராமசுப்பிரமணிய ராஜா இல்லமான ராமமந்திரம் வழியாக ராஜபாளையம் மில்ஸ் வந்தடைந்தது. அங்கு நினைவு ஜோதியை வெங்கட் ராமராஜா ஸ்தாபனம் செய்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் டி.எம்.கிருஷ்ணா இசைநிகழ்ச்சியும், நேற்று சஞ்ஜய் சுப்பிரமணியன் இசை நிகழ்ச்சியும் நடந்தன.
- வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி தலைவி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
- தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மதுரை
வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மாநில மகளிர் அணி தலைவியு மான அன்னலட்சுமி சகிலா கணேசனின் பிறந்தநாள் விழா மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
இதில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை பாராட்டும் விதமாக கல்வி வளர்ச்சி விருதினை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஹரிஹரன் பிள்ளை மற்றும் மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி மாதவன், தென்னக மக்கள் இயக்கத் தின் நிறுவனத்தலைவர் அய்யப்பன் கார்த்தி, மாநில ஆலோசனை குழு தலைவர் ஆடிட்டர் முருகேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் வெள்ளா ளர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வா கிகள், அனைத்து சமூக உறவுகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- வ.உ.சி.பேரவை நிறுவன தலைவர் அன்னலட்சுமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
- பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
மதுரை
தென் மாவட்ட வ.உ.சி பேரவை நிறுவனத் தலைவரும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆட்டோ கணேசன் மகள் அன்னலட்சுமியின் பிறந்த நாள் விழா மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வேளாளர் திருமண மகாலில் நாளை (2-ந் தேதி) நடக்கிறது.
இதையொட்டி காலை 9 மணிக்கு சிம்மக்கல்லில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
காலை 11 மணியளவில் மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வேளாளர் வெள்ளாளர் சமுதாயத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் கவியரசு கண்ணதாசன் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம் இணைந்து 101 கவிஞர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன், பழனியப்பன், பொற்கை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நூல் ஆசிரியர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.
- நகர தலைவர் பால பார்க்கவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாரண்ட அள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா நகர தலைவர் பால பார்க்கவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் பொன்முடி(எ) நாராயணசாமி மற்றும் வட்டார தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மேலும் எஸ்சி எஸ்டி தலைவர் பொண்ணன், துணைத் தலைவர் கோவிந்தராஜ், வட்டார சிறுபான்மை தலைவர் அஜிஸ்ல்லா மற்றும் அஹ்மத்துல்லா, வட்டார விவசாய அணி தலைவர் முருகன், முன்னாள் நகரத் தலைவர் ஜீவா கணேசன், நகர செயலாளர் முரளிதரன், நகரத் துணைத் தலைவர் வெற்றி செல்வன், இளைஞர் அணி தலைவர் பன்னிப்பட்டி வெங்கடாசலம், பேரூராட்சி கவுன்சிலர் மணிகண்டன், ரவி கண்ணன், மற்றும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.
கீழக்கரை
ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர் தலைவர் கோபி தலைமையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை அருகே கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் அவரது பெயரில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மண்டபம் மேற்கு வட்டார தலைவர் அன்வர் அலி நத்தர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் காவல்துறை அதிகாரி முருகேசன், சிறுபான்மை துறை உதவி தலைவர் பனைக்குளம் ஹனீப் கான், மாவட்ட பொதுச்செயலாளர் மோதிலால் நேரு, அழகன்குளம் அல் அமீன், பொன்னுச்சாமி, பாண்டி, நகரச் செயலாளர் முகவை பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
கீழக்கரை
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு சார்பில் முன்னாள் மாவட்ட தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான ம.தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கினர்.
முன்னதாக அரண்மனை கோட்டை வாசல், விநாயகர் கோவிலில் ராகுல்காந்தி பெயரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்துவேல், மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மேகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், போகலூர் வட்டார தலைவர் முனீஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தமிழரசன், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொன்.பெரியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கயம் :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளைெயாட்டி காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி கணபதிபாளையம் கிராமம், சிவன்மலை அடிவாரம், பாப்பினி பிரிவு, சிவன்மலை சத்தியாநகர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், படியூர் சண்முகசுந்தரம், சிவன்மலை சிவகுமார், அருண்தீபக், சண்முகம், கந்தசாமி, மகேஷ்குமார், சிலம்பரசன், வடிவேல், பழனாத்தாள் மாரிமுத்து, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, முத்துக்குமார், விஸ்வநாதன், இளமதி பாலமுருகேசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்