search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
    X

    புதுப்பேட்டை ராசு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு டாக்டர் செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

    • முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா வெகுவிமர்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசு வீதியில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், கல்வி கண்திறந்த கர்மவீரரும்மான காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ராசு வீதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பர்கூர் அரசு மருத்துவ–மனையில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் நலத்திட்டத்தினையும் டாக்டர் செல்லக் குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவின் போது மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தவர் சேகர், நகர தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, மூத்த வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், இளைஞர் அணி மாநில பொதுசெயலாளர் விக்னேஷ்பாபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார்,சேவாத்தள மாவட்டத் தலைவர் தேவராஜ், உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியினர் போச்சம்பள்ளி, ஓசூர், வேப்பனபள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டிணம், நாச்சிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காமராஜரின் உருவச்சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    Next Story
    ×