என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா
- கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கயம் :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளைெயாட்டி காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி கணபதிபாளையம் கிராமம், சிவன்மலை அடிவாரம், பாப்பினி பிரிவு, சிவன்மலை சத்தியாநகர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், படியூர் சண்முகசுந்தரம், சிவன்மலை சிவகுமார், அருண்தீபக், சண்முகம், கந்தசாமி, மகேஷ்குமார், சிலம்பரசன், வடிவேல், பழனாத்தாள் மாரிமுத்து, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, முத்துக்குமார், விஸ்வநாதன், இளமதி பாலமுருகேசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்