search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா
    X

     கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

    காங்கயத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளைெயாட்டி காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி கணபதிபாளையம் கிராமம், சிவன்மலை அடிவாரம், பாப்பினி பிரிவு, சிவன்மலை சத்தியாநகர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், படியூர் சண்முகசுந்தரம், சிவன்மலை சிவகுமார், அருண்தீபக், சண்முகம், கந்தசாமி, மகேஷ்குமார், சிலம்பரசன், வடிவேல், பழனாத்தாள் மாரிமுத்து, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, முத்துக்குமார், விஸ்வநாதன், இளமதி பாலமுருகேசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×