search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேத பரிசோதனை"

    • அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்
    • வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குரும்பூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 48).டிரைவர். மனைவி தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பத் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் நெடுங்கல் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நெடுங்கல் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று உடல் பிரேத பரிசோதனை

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 50), கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு அனீஸ் (15) என்ற மகன் உள்ளார். இவர்கள் தற்பொழுது ராஜாவூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அனீஸ் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அனீசுக்கு நேற்று திடீரென வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அனீசுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் அனீசை அவரது தாயார் ராஜேஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அனீசை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஸ்வரி வெளியே சென்று இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது அனீஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அவரை உடனடியாக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அனீசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த ராஜேஸ்வரி கதறி அழுதார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவி னர்கள் ஏராளமா னோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். பலியான அனீஸ் உடலை முதலில் சிகிச்சை அளித்த ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். தவறான சிகிச்சையால் மாணவன் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவி டப்பட்டது. இதை யடுத்து அனீசின் உடல்பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பலியான அனீஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமா னோர் அங்கு திரண்டு உள்ளனர். பிரேத பரிசோதனையில் தான் அனீஸ் எப்படி இறந்தார் என்று தெரியவரும்.

    • மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
    • இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சூசை நாதன் மகன் மரிய ஜோசப் (30) இவர் மஞ்சக் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரிய ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரிய ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.
    • உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஸ்துதாஸ் (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டின் அருகில் உள்ள வாய்காலில் குளிக்க செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று நேற்று மாலை வேலை முடிந்து வாய்க்காலில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் குளிக்க செல்லும் போது முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இவருடைய அண்ணன் சைமன் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கிறிஸ்துதாசின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    • வாணாபுரம் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
    • இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அன்பரசன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். மாலை வெகுநேரமாகியும் அன்பரசன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ள ஓடையில் அன்பரசன் பிணமாக மிதந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கை, கால்களை கழுவுவதற்காக ஓடைக்கு அன்பரசன் சென்றதும், எதிர்பாராத விதமாக அவர் ஓடைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கந்தசாமி (54).நேற்று 13ம்தேதி காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    அப்போது திருவண்ணாமலை செல்லும் ரோட்டில் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடில் சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து,கந்தசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கந்தசாமி பிணத்தை பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் ஒப்படைப்பு
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்கானிக்கல் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 10 ஊழியர்கள் நேற்று முன்தினம் கன்னியா குமரிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர்.

    அவர்கள் கன்னியாகுமரி யில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை கன்னியாகுமரி கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு சென்ற னர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.

    அப்போது கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலையில் மணி (வயது 30), சுரேஷ் (32), பிந்து (25) ஆகிய 3 பேரும் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்தனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உதவியுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்த 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் மணி மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே இறந்துவிட்டனர் என்று தெரிவித்தனர். பிந்து என்ற பெண் மட்டும் சிகிச்சைக்காக கன்னியா குமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பெங்களூ ரில் உள்ள மணி மற்றும் சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆசாரிப் பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள பிணவறை யில் வைக்கப்பட்டிருந்த மணி மற்றும் சுரேஷின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்களது உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவி னர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்களது உடலை வாங்கி கொண்டு உற வினர்கள் இன்று சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டு செல்கிறார்கள்.

    • 4 மணி நேரம் போராடி மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 19), கல்லூரி மாணவன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிமாங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித்குமார் திடீரென மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவரது நண்பர்கள் தண்ணீரில் தேடிப் பார்த்தும் அஜித்குமார் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய அஜித் குமாரின் சடலத்தை சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி போலீசில் புகார்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அருகே உள்ள உண்ணாமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 44), கூலித் தொழிலாளி.

    இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நடந்து சென்றார்.

    அப்போது, நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தம் பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்டபாணி உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவ மைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூடம் நகரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ரகு. இவரது மகன் சாகர் (வயது 24).

    இவர் வளத்தூர்-குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது ஜோலார் பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
    • கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது25). டிரைவர்.

    அருண்கார்த்திக் கடந்த 10-ந் தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    அவரது தந்தை மகனை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    அவரது நண்பர்களிடம் விசாரித்த போதும், அவர்களும் நாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியுள்ளனர். இதையடுத்து கணேசன் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.

    மேலும் பல்வேறு கோணங்களில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அருண்கார்த்திக்கின் நண்பர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது போலீசாருக்கு எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), அரவிந்த் என்ற அருண்ராஜ் (25) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அவர்களை பிடித்து விசாரித்த போது முதலில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருண்கார்த்திக்கை அடித்து கொன்று, உடலை கல்குவாரி அருகே புதைத்து விட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் எஸ்.சந்திராபுரத்தில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு அருண்கார்த்திக்கை கொன்று குப்பை, மணல் போட்டு புதைத்த இடத்தை காண்பித்தனர்.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. பிருந்தா, தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். அங்கு அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    அருண்கார்த்திக் எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் எப்போதும் ஒன்றாக மது குடிப்பதையும், சூதாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தோம்.

    தொடர்ந்து ஒன்றாக சந்தித்து கொண்டதால் நாங்கள் 3 பேரும் நண்பர்களாக மாறிவிட்டோம். எங்கு சென்றாலும் 3 பேரும் ஒன்றாக தான் செல்வோம்.

    அருண் கார்த்திக், எங்கள் 2 பேரிடம் பணம் கேட்டார். நாங்களும் நண்பர் என்பதால் எங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தோம். ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை.

    இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே கூறி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனை தொடர்ந்து அவர் எங்களுடன் சேருவதை நிறுத்திவிட்டார். சம்பவத்தன்று நாங்கள் அருண்கார்த்திக்கு போன் செய்து, பணம் சம்பந்தமாக நாம் சமாதானமாக சென்று விடலாம்.

    முன்பு போல நாம் நண்பர்களாக இருப்போம் என கூறி சமாதானம் பேசுவதற்கு அழைத்தோம். அவரும் வந்தார். பின்னர் 3 பேரும் எஸ்.சந்திராபுரத்தில் பாறைமேடு பகுதிக்கு சென்று மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் மீண்டும் பணம் தொடர்பாக தகராறு எழுந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கிருந்த கட்டையை எடுத்து அருண்கார்த்திக்கை தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

    அவர் இறந்துவிட்டதால் எங்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே அவரது உடலை மறைத்து விட முடிவு செய்தோம். அதன்படி அங்கு குழி தோண்டி உடலை உள்ளே தூக்கி போட்டு, மணல் மற்றும் அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து போட்டு மூடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம்.

    அருண்கார்த்திக்கின் தந்தை எங்களிடம் வந்து கேட்டபோது, நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று தெரிவித்ததோடு, அவருடன் இணைந்து தேடுவது போலவும் நாடகமாடினோம்.

    ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்கள் 2 பேரையும் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே கொன்று புதைக்கப்பட்ட அருண்கார்த்திக்கின் உடல் போலீசார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை நண்பர்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×