search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inquest"

    • உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேலும் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 

    • வாணாபுரம் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
    • இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அன்பரசன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். மாலை வெகுநேரமாகியும் அன்பரசன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ள ஓடையில் அன்பரசன் பிணமாக மிதந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கை, கால்களை கழுவுவதற்காக ஓடைக்கு அன்பரசன் சென்றதும், எதிர்பாராத விதமாக அவர் ஓடைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இறந்து 2 நாட்களாக வாலிபர் கிடந்தார்.
    • அலங்காநல்லூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூரை அடுத்த பூதகுடி ஊராட்சி, விஷ்வா நகர், 2-வது தெரு குடியிருப்பு பகுதியின் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையா ளம் தெரியாத வாலிபர் பிணம் ஒன்று கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உடனடி யாக அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இறந்து கிடந்த வரின் உடல் கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்ததால் முகம், கை, கால்கள் வீங்கி அடையாளம் தெரியாத வகையில் காணப் பட்டது.

    ஆள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் யாரோ வாலி பர் ஒருவர் மதுபோதை மயக்கத்தில் கிடப்பதாக நினைத்து கண்டுகொள்ளா மல் சென்று விட்டனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் உடல் கிடந்ததால் ளிட்ட பல்வேறு கோணங்க ளில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    • இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மரணத்திற்கு வேறு எதுவும் காரணமா? என்பது மர்மமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள நிரவில்புழா பகுதியில் கீச்சேரி பழங்குடியினர் குடியிருப்பு இருக்கிறது. இங்குள்ள ஒரு வீட்டில் பத்திரி மண்டபம் பகுதியை சேர்ந்த மணிக் கூத்தன்(வயது22), பிலக்காவு பகுதியை சேர்ந்த வினிதா(22) ஆகியோர் வசித்து வந்தனர்.

    பழங்குடியின வகுப்பை சேர்ந்த அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு கீச்சேரி பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் அடித்துள்ளது.

    இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், மணிக்கூத்தனின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மணிக்கூத்தன் மற்றும் அவரது மனைவி வினிதா ஆகிய இருவரும் வீட்டின் கூரையில் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்களது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதுகுறித்து தொண்டர் நாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்பு இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்தார்களா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என்பது மர்மமாக உள்ளது. இது பற்றி அக்கம்பக்கதத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது மணிக்கூத்தன் மற்றும் அவரது மனைவியை கடந்த ஒருவாரமாக அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்கள் இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் வினிதா கர்ப்பமாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்களை பற்றி அவர்களது உறவினர்களி டம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வீட்டை விட்டு வெளியேறிய மணிக்கூத்தன் மற்றும் வினிதா ஆகிய இருவரும் கீச்சேரியில் இருப்பது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

    வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து வாழந்துவந்த பழங்குடியின ஜோடி மர்மமான முறையில் இறந்திருப்பது வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.
    • மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மதுரா நார்சாம்பட்டு கிராமத்எதை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியராஜ். இவர் நேற்று தனது உறவினர் டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது தனது 3 வயது குழந்தையை ஐஸ்வர்யா டிராக்டரின் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டி நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது திடீரென குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.

    காயமடைந்த குழந்தையை சி கிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×