search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி டிரைவர் பலி
    X

    வாகனம் மோதி டிரைவர் பலி

    • அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்
    • வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குரும்பூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 48).டிரைவர். மனைவி தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பத் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் நெடுங்கல் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நெடுங்கல் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×