search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரார்த்தனை"

    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
    • திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அற்புதராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேரலாயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணி வந்த உடன் கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். பின்னர் தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றபட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

    இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

    இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • புனித கொடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
    • முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.

    தர்ஹாவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக, மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியி லிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர், புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் யானை, ஒட்டகங்கள், ஆட்டகுதிரைகள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது.

    அங்கு ஆசாத்நகர் மீன் மார்க்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை வந்தடைந்தது.

    பின்னர், தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து, அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். பின்னர், சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு புனித கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 8-ந் தேதி இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு ஆலயத்தில் பிரார்த்த னைக்காக பலரும் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

    அவர் தீடிரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதற்கிடையில் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் (வயது 50) என்பதும் நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார் என்பதும் தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்த இடத்தில் அவர்களுக்கு மலர் அணிவித்தனர்.
    • பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தி அஞ்சலி.

    தஞ்சாவூர்:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் ஜெபித்து மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக வந்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்களும் கல்லறைகளுக்கு சென்று ஜெபித்தனர்.

    இதே போல் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    • மதுரையில் நடந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
    • குடும்பத்துடன் வந்து மலர்தூவி வழிபாடு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சென்று கல்லறை தோட்டங்களில் மலர் தூவி, படையல் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி உயிர் நீத்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மனம் உருகி கண்ணீரோடு வழிபாடு நடத்துவது வழக்கம்.இன்று (2-ந்தேதி) மதுரையில் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. மதுரையில் மகபூப் பாளையம், தத்தனேரி, பாக்கியநாதபுரம், புதூர், அழகரடி, கூடல் நகர், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.

    கல்லறைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி பிரார்த்தனை செய்தனர். இதை தொடர்ந்து முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை படையல்களாக படைத்து மனம் உருகி கண்ணீருடன் இறைவழிபாடு செய்தனர். இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறும் வகையில் இறை வேண்டுதல்களும் செய்யப்பட்டன.பல்வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படவில்லை. தற்போது அங்கு கல்லறைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் அமைதியான முறையில் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
    • கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.

    கடலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கடலூரில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்ல றையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம்.

    மேலும், கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை கல்லறைத்தோட்டம், ஏ.எல்.சி. கல்லறைத் தோட்டம், புனித எபிநேசர் கல்லறைத் தோட்டம், ஆர்.சி. கத்தோலிக்க கல்லறைத் தோட்டம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டம், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை நடத்தினர். மேலும் தங்கள் உறவினர் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னோ ர்களை நினைவு கூர்ந்தனர். 

    • பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர்.
    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று ஆடி 18-ம் நாள் விழா அதாவது ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி கரைகளில் ஆடிபெருக்கு விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சையில் பெருக்கெடுத்து ஓடும் கல்லணை கால்வாய் படித்துறைகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். புதுமண தம்பதிகள் தங்களது மாங்கல்யத்தை கோர்த்து புதிதாக அணிந்து கொண்டனர்.

    திருவையாறு காவிரி புஷ்ய மண்டபதுறையில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர். மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருந்த புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். 'கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும்' என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டினர்.

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர். அந்த ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். கும்பகோணம் மகாமககுளத்திலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரையில் பொதுமக்கள் பலர் புனித நீராடி வேதாரண்யேஸ்வர சுவாமியை வழிப்பட்டனர். மயிலாடுதுறை துலா கட்டம், பூம்புகார் கடற்கரைகளிலும் புதுமண தம்பதிகள் குவிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

    ×