search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் பண்டிகை"

    • ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் பாக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும்.

    ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் (டிசம்பர் 26-ந்தேதி) பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த ஆண்டு மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தானுடன ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர். அவர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம்.
    • கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில், அவர் பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் தொடக்கமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் பல சின்னங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், விழாவின் ஆயத்த பணி நாட்களின் போதும் இந்த சின்னங்கள் பிரதானமாக இடம் பெறுகின்றன.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சின்னங்களான கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மணிகள், சாண்டா கிளாஸ், ஏஞ்சல்ஸ், புறா போன்ற பல சின்னங்கள் உள்ளன.

    ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். அதாவது பசுமை மாறாத ஊசியான கூம்பு வடிவில் உள்ள மரங்களை வெட்டி ஆலயத்தின் வெளியே வைத்து, அதில் வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். சிலர் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது வீட்டின் முன்பும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து விழாவை கொண்டாடுவார்கள்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி. புனித போனிடஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனை செய்திருந்த வேளையில் அங்கிருந்த மக்கள் ஓக் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனை கண்ட அவர் அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார். அதனடியில் இருந்து கிறிஸ்துமஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக ஓர் நிகழ்வு கூறப்படுகிறது. இதுவே கிறிஸ்துமஸ் மரத்திற்கு அனைவர் கூறும் கதை.

    1500-ம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் பனிபடர்ந்த மரங்கள் மீது வெளிச்சம் பட்டு ஒளிர்வதை கண்டு பீர்மரத்தை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது.

    18-ம் நூற்றாண்டிற்கு பிறகு கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் நிகழ்வு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பதும், அதன் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூயஆவி எனும் முப்பரிமாணங்களை குறிப்பதாகவும் உள்ளது என கிறிஸ்துவ விளக்கங்கள் கூறுகின்றன.

    கிறிஸ்துமஸ் ஸ்டார்

    கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு முன்பாகவே, டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் அழகிய நட்சத்திரம் (கிறிஸ்துமஸ் ஸ்டார்) தொங்கவிடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் விழாவில் நட்சத்திரத்தின் அலங்கார அணிவகுப்பு நிகழ காரணமாய் யாதெனின், பெத்லேகம் விண்மீன் அல்லது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது இயேசுவின் பிறப்பை ஞானிகளுக்கு சுட்டிக்காட்டிய விண்மீன். பெத்லகேமில் இயேசு பிறந்த இல்லம் வரை ஞானிகளுக்கு வழிகாட்டியது இந்த நட்சத்திரம்.

    அதன் நினைவாய் தங்கள் இயேசு பிறப்பு வழிகாட்டிய விண்மீன் தொங்கட்டும் என கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் "கிறிஸ்துமஸ் ஸ்டார்" என்ற விண்மீன் விளக்கை ஒளிர விடுகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் குச்சி

    250 வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கிறிஸ்துமஸ் இனிப்பு குச்சி. 1670-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அமைதியாக அமர்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட' ஜே' வடிவிலான இனிப்பு குச்சி. இருப்பினும் இந்த ஆடுமேய்ப்பர் துரடு வடிவ இனிப்பு குச்சியின் வடிவம் ஜீசஸ்சை குறிப்பதாகவும், இதில் உள்ள சிவப்பு கோடு சிலுவையின் ரத்தத்தையும், வெண்ணை நிறம் தூய்மையை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பெப்பர்மின்ட் சுவை ஹைசாப் செடியை நினைவு கூறும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவை நினைவு கூறும் வகையில் இன்னும் நிறைய சின்னங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியை, அதன் புனிதத்தை அறிவிக்கும் நோக்கிலேயே உள்ளன.

    • மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.
    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, காசிமேடு, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக மீன் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணை கழிவு கலந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு ஒருமுறை கடலில் கச்சா எண்ணெய் கலந்த போதும் விற்பனை குறைந்து காணப்பட்டது. அப்போது மீன் உண்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு விற்பனை அதிகரித்தது. ஆனால் தற்போது அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் பொதுமக்கள் பலர் மீன் வாங்க தயங்குகிறார்கள் என்று மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் மீன்வரத்து மற்றும் விற்பனை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு 200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து இன்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். ஞாயிற்றுக்கிழமையான இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் மீன்கள் விலையும் மிக குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில் இன்று மீன் வாங்க அதிக கூட்டம் காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட வவ்வால் இன்று ரூ.200-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்கப்பட்ட சங்கரா ரூ.100-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட சீலா ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.80 முதல் 90-க்கும் விற்கப் பட்டன. இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நாளை மீன்வரத்தும் அதிகமாக இருக்கும், மேலும் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர். மேலும் வீடுகளில் ஸ்டார்கள் தொடங்கவிட்டுள்ளனர். மேலும் நகரப்பகுதியில் சாலையோரங்களில் குடில்கள், ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்தவர்கள் வீடுகளில் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளும் அளித்து வருகின்றனர்.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி, தூய்மா வீதி கப்ஸ், அரியாங்குப்பம் மாதா, வில்லியனூர் மாதா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    • குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.
    • சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூக்கும். அதன்படி தற்போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

    எபிடன்ரோபியம், சீசஸ்கிராஸ் என்று தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிலுவை மலர்கள் குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும். சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்துக்குலுங்கும். இந்த சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். செட்டியார் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களிலும் நடவு செய்யப்பட்ட சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது.

    இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனைதொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் செய்யப்பட்டு வருகின்றன. 

    • ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது.
    • கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஈரோடு:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

    கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் வீட்டின் முன் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்கவிட்டும், வீட்டுக்குள் குடில்கள் அமைத்தும் இருந்தனர்.

    இது தவிர தேவாலயங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்க ப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

    பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்தில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் சிறப்பு பிரா ர்த்தனை நடைபெற்றது.

    பிரார்த்தனை முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். உறவினர்கள் நண்பர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை களை கட்டியது.

    • தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.
    • குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.

    நள்ளிரவு 12 மணிக்கு மாட்டுத் தொழுவத்தின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட குடில் அலங்காரத்தில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தப்பட்டது. திருப்பூரில் புனித கேத்தரீன் சர்ச், புனித பவுல், ஏ.ஜி., ஆலயம், கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம்,பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.

    மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவிலில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடந்தது. இதேபோல பிற தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கிறிஸ்தவா்களின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடந்தது. தொடா்ந்து குழந்தை இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் குழந்தை இயேசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் கூட்டுத் திருப்பலி , சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா். நாட்டில் அமைதியும், அன்பும் நிலவ வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் வழிபாடு நடந்தது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். 

    • நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது.
    • மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    ஏசு கிறிஸ்து டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன்படி நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் இரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்கு தந்தை வைத்து, திருப்பலி நடத்தினார்.

    இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், குறிஞ்சிநகர் குழந்தை ஏசு ஆலயம், முதுநகர் பெந்தேகொஸ்தே சபை, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயம் போன்ற பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடலூர் ஏ.எல்.சி. தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரா ர்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவையொட்டி கடலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
    • திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அற்புதராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேரலாயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணி வந்த உடன் கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். பின்னர் தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றபட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை-நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோ வில் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) டிசம்பர் 23 (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானா மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 2-ம் வகுப்பு பொது பெட்டிகள், மா ற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்‌.

    தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரெயில் (06041) தாம்ப ரத்தில் இருந்து டிசம்பர் 23 (வெள்ளிக்கிமை) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சேரும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய 2 அடுக்கு படுக்கை வசதிபெட்டி, 11 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
    • 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் மதுபான வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம்.

    அதனடிப்படையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    இந்த கலவை 30 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 80 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இந்த கேக்குகள் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பாடல்கள் பாடி உற்சாகம் அடைந்தனர்.

    கேக் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வகை உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் காட்சிபடுத்தப்பட்டு அவை ஒவ்வொன்றின் தனித்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமையல் கலைஞர்கள் மட்டுமின்றி இதில் பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற கேக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    ×