search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதபூஜை"

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
    • விழாவில், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வழிபடுகிற பாத பூஜை விழா நடை பெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா அறிவுரையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.

    மாணவிகள் பேரவைத்தலைவரும், கணினிப்பயன்பாட்டியல் துறைத்தலைவருமான அனுஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சாரதா கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காபிரியா அம்பா கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் பாதபூஜை விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவி கள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வணங்கி பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பிரதிநிதி களுக்கு நினைவுப் பரிசும், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் கணிப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

    ×