search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சாரதா கல்லூரியில் பாதபூஜை விழா
    X

    விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு மாணவிகள் பாதபூஜை செய்த காட்சி.

    நெல்லை சாரதா கல்லூரியில் பாதபூஜை விழா

    • மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
    • விழாவில், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வழிபடுகிற பாத பூஜை விழா நடை பெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா அறிவுரையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.

    மாணவிகள் பேரவைத்தலைவரும், கணினிப்பயன்பாட்டியல் துறைத்தலைவருமான அனுஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சாரதா கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காபிரியா அம்பா கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் பாதபூஜை விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவி கள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வணங்கி பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பிரதிநிதி களுக்கு நினைவுப் பரிசும், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் கணிப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×