search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரதா கல்லூரி"

    • மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
    • விழாவில், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வழிபடுகிற பாத பூஜை விழா நடை பெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா அறிவுரையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.

    மாணவிகள் பேரவைத்தலைவரும், கணினிப்பயன்பாட்டியல் துறைத்தலைவருமான அனுஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சாரதா கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காபிரியா அம்பா கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் பாதபூஜை விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவி கள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வணங்கி பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பிரதிநிதி களுக்கு நினைவுப் பரிசும், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் கணிப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

    • நெல்லை இந்துக்கல்லூரி உதவி பேராசிரியர் வேல்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • ‘டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு’ பற்றி செல்வக்குமார் சாமுவேல் உரையாற்றினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) கணினி பயன்பாட்டு துறையில் வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பிரியா அம்பா ஏற்பாட்டில், கல்லூரி இயக்குனர் மேஜர் சந்திரசேகவன் வழிகாட்டுதலுன் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கமலா, கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் பார்வதி தேவி ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு விருந்தினராக நெல்லை இந்துக்கல்லூரி அறிவியல் துறை உதவி பேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டு சுற்றுப் புற நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 2-வது அமர்வில் ஆசிய பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை பேராசிரியர் செல்வக்குமார் சாமுவேல், 'டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு' பற்றி உரையாற்றினார். 3-வது அமர்வில் சுஜாதா கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சீனா 'கம்பியில்லா தொலைத்தொடர்பில் நிகழ் ஆராய்ச்சிகள்' பற்றி உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 55 மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டதுடன் ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கினர். முடிவில் கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.

    ×