search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவைகள்"

    • இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

    கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் உள்பட அரியவகை பறவைகள் வலசை பயணமாக வரும்.
    • நீலகிரி மாவட்டம் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கலாம்.

    அரவேணு:

    சர்வதேச அளவில் பறவைகள் வந்து செல்லும் வலசை பாதைகளில், முக்கியமான பாதையாக நீலகிரி மாவட்ட மலைத்தொடர் பகுதி உள்ளது.

    நீலகிரி சிறந்த உயிர்ச் சூழல் மண்டலமாக உள்ளதால், ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் உள்பட அரியவகை பறவைகள் வலசை பயணமாக வரும்.

    இந்த பறவைகள் அங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து, மீண்டும் அவை எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கே திரும்பி சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

    இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் உறைபனி பொழிவு குறைவு காரணமாக, பறவைகளின் வலசைப்பாதை பயணம் சற்று தாமதமாக தற்போது துவங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு யுரோப்பியன் கிரீன் வுட் பெக்கர், ப்ளூ கேப்பிடூ ராக் திரஷ், லாங் கிரே பாபுலர், ஹிரோஷியன் வுட் பெக்கர், லாங் டைல் சிறைக், சினோரியஸ் டிட், ஒயிட் ஐ, கிரேட்டர் கோணிகர், வேக்டைல், இந்தியன் ரோலர், ரோஸ் ரிங் பேரகிட், ஹான்பிள் ஆகிய அரிய வகை பறவைகள் வந்துள்ளன.

    பறவைகளை நீலகிரியின் பல்வேறு இடங்களில் எளிதாக காண முடிகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம் கோடநாடு காட்சி முனை, கோத்தகிரி லாங்வுட் சோலை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, பர்லியார், குன்னூர் டால்பின்ஸ் நோஸ் காட்சி முனை, கூடலூர் ஊசிமலை காட்சி முனை ஆகிய பகுதிகளில் பறவைகள் இடம் பெயர்கின்றன.

    இந்த பறவைகளை பறவைகள் ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு கழித்து, புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கலாம். ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன.

    தற்போது முக்கிய இடங்களில், பறவைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதற்கு காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர் மழை, பனிப்பொழிவு இல்லாத காரணத்தால் பறவைகளின் உள்ளூர் இடம் பெயர்வு தாமதமாகவே துவங்குகின்றது. இந்த பருவநிலை மாற்றம் இயற்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் ஆகும்.

    எனவே மரங்களை வளர்த்து, சுற்றுச் சூழலை பாதுகாத்து, பருவநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
    • குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.

    திருப்பூர் : 

    திருப்பூர் நஞ்சராயன் குளம் தமிழகத்தின், 17 -வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

    கடந்த மாதம் ரஷ்யா, மங்கோலியா பகுதிகளில் இருந்து வரும் பட்டைத்தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறு கொசு உள்ளான், பேதை உள்ளான், மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.

    இதுமட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர் காகம், பழுப்பு நாரை, மடையன், கரண்டிவாயன், நெடுங்கால் உள்ளான், புள்ளிமூக்கு வாத்து, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, மீன்கொத்திகள் என பறவைகள் வந்தன. வழக்கமாக கூட்டமாக வரும் பறவையினங்கள் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:- வெளிநாட்டு பறவைகள், குளிர்கால வலசையாக நஞ்சராயன்குளம் வந்துள்ளன. வழக்கமாக 100 முதல் 200க்கும் அதிகமான பறவைகள் கூட்டமாக வந்து செல்லும். இம்முறை 20க்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன. குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.

    வெளிநாட்டு பறவைகள் தண்ணீரில் நடந்து சென்றுதான் உணவு தேடும். ஆழமான குளம், தண்ணீர் அதிகம் உள்ள குளங்களில் தங்காது. குளத்தில் அதிகம் தண்ணீர் இருப்பதால் அருகே உள்ள மற்ற பகுதிக்கு சென்றிருக்கும்.கோவை, ஈரோடு பகுதியிலும் பறவை வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது.
    • வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் நஞ்சராயன் குளம் நீராதாரமாக மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் வசிக்கும் பல்லுயிர் சுழற்சி மண்டலமாகவும் மாறியுள்ளது. இக்குளத்தில், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது. தற்போது சரணாலய பணி வேகமெடுத்துள்ளது. மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டு வனத்துறை வசம் குளம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளது.

    குளத்தின் மண் கரை 2,797 அடி நீளம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் அதிகபட்சமாக 39.50 அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. மொத்தம்2.53 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.தனியார் நிறுவனம் வாயிலாக குளத்தில் அமைய உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் பறவைகள் சரணாலயம் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது. வனத்துறை முழுமையான சர்வே நடத்தி முழு எல்லையை கண்டறிந்துள்ளது. குளத்தின் மொத்த பரப்பு 310 ஏக்கர்.

    திருப்பூர் கூலிபாளையம் ரோட்டின்,ரெயில்வே பாலத்துக்கு முன்பாக இடது புறம் செல்லும் மண்பாதையே, பறவைகள் சரணாலயத்தின் பிரதான பாதையாக மாறப்போகிறது. கூலிபாளையம் ரோட்டில், அலங்கார வளைவும், அங்கிருந்து அணுகுசாலையும் அமைக்கப்படுகிறது.

    அணுகுசாலை அருகிலேயே பார்க்கிங் வசதியும் அங்கிருந்து சென்றால் ரெயில்வே பாதை நெருங்கும் இடத்தில் கன்சர்வேஷன் சென்டர் அமைக்கப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, ஆக்சிஜன் பூங்கா அமைய உள்ளது.

    சிறு கூட்டரங்கு, கருத்தரங்கு வளாகம், வரவேற்பு அறை, டிக்கெட் கவுன்டர், மூங்கில் பூங்கா ஆகியவை அமைகின்றன. அங்கிருந்து நஞ்சராயன் நகரை ஒட்டியபடி குளக்கரையில் சென்றால் நஞ்சராயன் நகர், தென்கோடி எல்லையில் உயரமான வாட்சிங் டவர் அமைக்கப்படுகிறது. ஏறத்தாழ குளத்தின் மையப்பகுதியை நெருங்கி விடுவதால் அங்கிருந்து குளத்தின் முழு பரப்பையும் பார்க்க முடியும்.

    வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், அப்பணிகளை 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

    முதல் ஆண்டில் (2022-23) ரூ.13.25 லட்சம்,2வது ஆண்டில் ரூ. 86.30 லட்சம் ,3வது ஆண்டில் ரூ. 3.60 கோடி,4வது ஆண்டில்ரூ. 1.35 கோடி, 5வது ஆண்டில், 1.54 கோடி என பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் பறவைகள் சரணாலயம் உருவாக 5ஆண்டுகளாகிவிடும்.

    இந்நிலையில் திருப்பூர் பசுமை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சியுடன் கரம் கோர்த்து நமக்கு நாமே திட்டத்தில், பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அனைத்து அமைப்பினர், தன்னார்வலர்கள், விவசாயிகள் இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பு குழு கூட்டம் விரைவில் திருப்பூரில் நடைபெற உள்ளது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்ட பணிகளை செம்மையாக செய்திட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏழு குளம் என்று அழைக்கப்படும் குளங்களின் நீர் மட்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் செங்குளத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன. செங்குளம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பாசன பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர், கால்வாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை அடுத்தடுத்துள்ள ஏழு குளம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 10 மாதங்களுக்குள் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசாணை வருகிறதோ? அந்த அளவு தண்ணீர் அந்த காலத்திற்குள், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவையைப்பொறுத்து விடப்படும்.

    அதன்படி ஒட்டுக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது தண்ணீர் கேட்காத நிலையில் அவர்கள் கேட்கும்போது விட அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதனால் அந்த குளம் தவிர மற்ற 7குளங்களுக்கும் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதனால் இந்த குளங்களின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பள்ளபாளையம் அருகில் உள்ள செங்குளத்திற்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. கொக்குகள், நாரைகள் மற்றும் நீர்க்கோழிகள் அதிகமாக வந்துள்ளன.நீர்க்கோழிகள் கூட்டமாக குளத்துதண்ணீரில் நீந்தி செல்கின்றன.கரையோரங்களில் கொக்குகள் மற்றும் நாரைகள் தண்ணீரில் மீன்களை தேடுகின்றன.மீன்கள் தென்பட்டதும் அதை கொக்குகளும், நாரைகளும் கொத்தி தின்கின்றன.இடையிடையே அவை குளத்திற்குள் உள்ள மரங்களில் கூட்டமாக உட்கார்ந்து இளைப்பாறுகின்றன.

    • உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் நிகழ்ச்சி
    • மாவட்ட வன அதிகாரி தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ளபுத்தளத்தில் உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் குறித்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார்.

    கலெக்டர் அரவிந்த், வருவாய் அதிகாரி சிவ பிரியா, பால பிரஜாபதி அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ரஷ்யா, சைபிரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த உள்ளான், ஆளா உள்ளிட்ட பறவைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

    பின்னர் அந்த பறவை களை கலெக்டர் அரவிந்த், வன அலுவலர் இளைய ராஜா, பறவைகள் ஆராய்ச்சி யாளர் பாலச்சந்திரன் உள்ளி ட்டோர் பறக்க விட்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறு கையில், குமரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த பற வைகள் அதிக அளவு வருகின்றன. பறவைகள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியும் வகையில் பறவைகளின் கால்களில் வளையங்கள் மாட்டப்படுகிறது.

    ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.இங்கு இருந்தும் பறவை கள் அங்கு செல்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக பறவைகள் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற போது 170 வகையான 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சைபிரியா,ரஷ்யா, ஆர்டிக் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் கன்னியாகுமரி மாவட்டம் வருகின்றன. சூரிய ஒளி அடிப்படையில் இந்த பறவைகள் வருகிற நிலையில் தற்போது ஒளியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அவைகள், திசைமாறிச் சென்று கட்டிடங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    ஒரு வருடத்திற்கு 10 கோடி பறவைகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்த பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் மூலம் பொது மக்களுக்கு பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • ராமநாதபுரம் அருகே போதிய மழை இல்லாததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
    • மீன்கள் இல்லாததால் பறவைகள் வரத்து குறைந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

    இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.

    ஒகுறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன்பின் இடம்பெயர்கின்றன.

    இந்த ஆண்டு ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து குட்டைபோல காட்சியளிக்கிறது.

    குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் நீர்தேக்கத்தில் நீரை உறிஞ்சும் அமலச்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. குறைந்த அளவில் உள்ள நீரில் தடையை மீறி சிலர் துாண்டில் மூலம் மீன்களை பிடிக்கின்றனர். இதனால் பறவைகள் குறைந்த நிலையில் காணப்படுகிறது.

    வறண்ட நிலையில் உள்ள நீர்த்தேக்கத்தை மழைக்காலத்திற்கு முன்னதாக துார்வாரி ஆழப்படுத்தவும், அமலச்செடிகளை அகற்றவும், மீன்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் சரணாலயத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1 தீவு சுமார் 5000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்த தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏரியானது தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரம் ஏரியில் இன்று வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலர்கள், கவின்மிகு இயக்கம் தஞ்சை சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சை சமுத்திரம் ஏரி பொதுப்பணித்துறை, கல்லணை கோட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து சமுத்திரம் ஏரியில் 3 தீவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மரங்கள் நடப்பட்டு அது பறவைகள் வாழ்விடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 1 தீவு சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்தத் தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன. மேலும் இரண்டு தீவுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக தீவுகளின் பரப்பளவு 1 ஏக்கர் அளவில் இருக்கும். இந்த தீவுகள் அனைத்திலும் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் இதற்காக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கவின்மிகு தஞ்சை நிர்வாகிகளுக்கும் குறிப்பாக டாக்டர் ராதிகா மைக்கேல், பாண்டியன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமுத்திரம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது. இதன் மதிப்பு ரூ.8.8 கோடி ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×