search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Therthangal"

    • ராமநாதபுரம் அருகே போதிய மழை இல்லாததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
    • மீன்கள் இல்லாததால் பறவைகள் வரத்து குறைந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

    இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.

    ஒகுறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன்பின் இடம்பெயர்கின்றன.

    இந்த ஆண்டு ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து குட்டைபோல காட்சியளிக்கிறது.

    குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் நீர்தேக்கத்தில் நீரை உறிஞ்சும் அமலச்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. குறைந்த அளவில் உள்ள நீரில் தடையை மீறி சிலர் துாண்டில் மூலம் மீன்களை பிடிக்கின்றனர். இதனால் பறவைகள் குறைந்த நிலையில் காணப்படுகிறது.

    வறண்ட நிலையில் உள்ள நீர்த்தேக்கத்தை மழைக்காலத்திற்கு முன்னதாக துார்வாரி ஆழப்படுத்தவும், அமலச்செடிகளை அகற்றவும், மீன்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் சரணாலயத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×