search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி"

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 622-க்கு விலை போனது.

    அரியலூர் :

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்குட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், சேலம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர்.

    இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 622-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 889-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 509-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 648.46 குவிண்டால் பருத்தி 280 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.41 லட்சத்து 13 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலர வைத்து வருகிற புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளனர்.

    • சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும்.
    • இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கிடங்கின் வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் நடராஜன், சிவபழனி ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த ஏலத்தில் 1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றும், பருத்திக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது
    • வருகிற 6-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 6-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது. மேற்படி ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும், இந்திய பருத்தி கழகத்தாரும் பங்கேற்க உள்ளதால் விவசாயிகள் பருத்தியினை தூசி மற்றும் அயல் பொருட்கள் கலப்பின்றி நன்கு உலர வைத்து தரம் பிரித்து விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.

    விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கு உரிய தொகை அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளதால் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர்களை 04331-296224 என்ற தொலைபேசி எண்ணிலும், 9655180343, 9842452150 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண் துணை இயக்குனர் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
    • நன்கு காயவைத்து கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    திருவாரூர்

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

    திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

    அதிகபட்ச விலை நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

    அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.
    • ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.

    பாபநாசம்:

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 376 விவசாயிகள் தங்களது பருத்தியினன விற்பனறக்கூ டத்திற்குனை கொண்டு வந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள், ஆந்திர மாநில வணிகர்கள் மொத்தம் 10 வணிகர்கள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    விற்பனைக்குழு செயலாளர் சரசு, விவசாயி களிடம் பருத்தியினை நன்கு உலர வைத்து ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேட்டுக் கொண்டார்.

    இம்மறைமுக ஏலத்தில் 65 மெ.டன் அளவுள்ள ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி யானது வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,769 , குறைந்தபட்சமாக. ரூ.5,329, சராசரியாக ரூ.6,189-க்கும் விலை போனது.

    மேலும் இம்மறைமுக ஏலத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி , விளம்பரம் மற்றும் பிரசார சித்தார்த்தன், அன்பரசு உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 832 விவசாயிகள் தங்களுடைய 8,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,589 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 5,800 முதல் ரூ. 7,469 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,700. கடந்த வார சராசரி விலை ரூ. 6,900. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.72 கோடி.ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.
    • பருத்தியில் நோய் தாக்குவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.

    அவ்வாறு பயிரடப்பட்டுள்ள பருத்தியில் தற்போது இலை சிவந்து, காய்ந்து விடுவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    இந்நிலையில், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநர் கருணாகரன் மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை, உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் குடவாசல் வட்டாரத்தில் ஒரு விவசாயியின் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    • 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும்.
    • பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றியக்குழு கூட்டம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலிய பெருமான் தலை மையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர், செந்தில்குமார் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கத்தின் செயலாளர் சின்னராஜா கலந்து கொண்டு பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வலங்கை மான் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், ராஜேஷ்கண்ணா மோகன், மாலா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 8,057 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 7,700 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.71 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 832 விவசாயிகள் தங்களுடைய 8,057 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,532 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 24 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 7,700 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,900. கடந்த வார சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 1.71 கோடி.

    விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • 416 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
    • பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.7,316 வரை ஏலம் போனது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7.75 லட்சத்துக்கு வா்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 416 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் ஆா்.சி.எச்.பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,316 வரையிலும், கொட்டுரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.7.75 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. 

    • பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது.
    • ரூ. 2000 முதல் ரூ.7322 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் விளையும் பஞ்சுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் ஆர்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ.7322 வரையிலும் மட்ட ரக பருத்தி ரூ. 2000 முதல் 3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 6.77 லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 24 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்
    • சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.72 கோடி.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 802 விவசாயிகள், 8,123 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.இவற்றின் எடை 2,596 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 24 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.பருத்தி குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.72 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    ×