search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்பு"

    • ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் அங்கம்
    • தலைவருக்கு சுத்தியல் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை, 

    ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கத்தின் புதியஅங்கமாக, புதுக்கோட்டை ஆனந்தம் புதிய சங்க துவக்க விழா நேற்று மாலை புதுக்கோட்டையில் எழில் நகரில் உள்ள தாஜ் மினி ஹாலில் நடைப்பெற்றது. ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கம் தலைவர் கண்ணன் தலைமையில் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். புதிய தலைவரிடம், கூட்டங்களை நடத்த பாரம்பரிய சுத்தியல் வழங்கப்பட்டது.புதிய சங்கத்தின் பேனரும் வழங்கப்பட்டது.மாவட்ட அவை செயலர் செல்வராஜ், மாவட்ட அவை பொருளாளர காமராஜ், கூடுதல் மாவட்ட அவை செயலாளர் சசிகுமார், கூடுதல் மாவட்ட அவை பொருளாளர் சிபக்குமார், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டாக்டர் மகேந்திரன், சங்கம் விரிவாக்கம் நெல்சன் ஆரோக்கியம், மண்டல தலைவர்சிவக்குமார், வட்டார தலைவர் டாக்டர் அம்முட்டி பாபா வாழ்த்துரை வழங்குகினார். புதுக்கோட்டை ஆனந்தம் சங்க நிர்வாகிகள் தலைவராக சோலை சுப்பிரமணியன், செய லாளராக இளவரசு சோம சுந்தரம், பொருளாளராக எஸ்.என்.பழனியப்பன், முதல் துணைத் தலைவராக இளஞ்சேரன், இரண்டாம் துணை தலைவராக விஜயலெட்சுமி, துணைச் செயலாளராக ஆண்டோ கலைச்செல்வன், இயக்கு நர்களாக அமுதன், அமல சவரிராஜ், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக சுவாமிநாதன், தலைமை பண்பு பயிற்சி தலைவராக ச.மனோகர், முடுக்குனராக தங்கராஜ், அடுக்குனராக ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலராக சோலைச்சி, உறுப்பினர்களாக பத்பநாபன், அரவிந்த்ராஜா, கீதா, சூரஜ் ஜம்பாஜி ஜாதவ், இளங்கோவன், ருத்ர சங்கர் மாலி, சேகர், செல்வராஜ், பெரியசாமி, பிரேம் ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், அருள்செல்வம், நல்லதம்பி ஆகியோர்ப தவியேற்றனர். விழாவில் தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ், மருத்துவர் ராம்பிரகாஷ், லயன்ஸ் மேனா.குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு
    • புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகர வணிகர் சங்க புதிய நிர் வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

    பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா தக்கலையில் உள்ள லலிதா மகால் திரு மண மண்டபத்தில் நடந் தது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர், இணை செயலாளர் விஜயன். மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் விஜயகோபால் வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து புதிய நிர்வா கிகள் பதவியேற்றனர். தலைவராக ஜெகபர் சாதிக் பொதுச்செயலாளராக விஜயகோபால், பொரு ளாளராக தாணுமூர்த்தி, துணைத்தலைவர்களாக சண்முகம், சுரேஷ்குமார், செயலாளர்களாக மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவ தலைவராக ஆனந்தம் சி.குமார் செயற்குழு உறுப் பினர்களாக ஜெயகுமார், பத்மதாஸ், ஹமாம், ஸ்ரீராம், ஹரி பாலாஜி, வர்க்கீஸ், இளங்கோ, ஜலால், சங்கர மூர்த்தி ஜூட்ஸ் பெர்லின், சேத்திரபாலன், ராஜூ, செய்தி தொடர்பாளராக ஜோஸ்வா ஆகியோர்பதவி யேற்றனர்.

    விழாவின் சிறப்பு விருந் தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். வியா பாரிகள் பல கஷ்டங்கள், நஷ்டங்களை சந்தித்து வியா பாரம் செய்கிறார்கள் வணி கவரித்துறை, உணவு பாது காப்பு துறை போன்றவற் றால் ஏற்படும் பிரச்சினை களை சட்டரீதியாக நாம் சந்திக்க வேண்டும்.

    இதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை முடக் கும் விதமாக முதலில் வியா பாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்தார்கள். அதை விபாபாரிகள் ஓட்டல்கள், டீக்கடை போன்றவற்றிற்கு வியாபாரம் செய்தனர்.

    இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விற்கிறார்கள். இதனால் நம் வியாபாரிகள் பாதிக்கப்படு கிறார்கள் இதற்கு முடிவுகட் டுவதற்காக இளம் தொழில் முனைவோர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நம் குறைகளை அரசிடம் முறை யிடுவோம் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் போராடுவோம். நமக்குள் ஒருவருக்கு பிரச்சினை என் றால் அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் நெல்லை மாவட்ட தலைவர் சின்ன துரை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், மண்டல தலைவர் வைகுண்டராஜன், பத்ம நாபபுரம் நகராட்சி தலை வர் அருள் சோபன், ஆணை யர் லெனின், தேர்தல் அதி காரி முருகேசன், சமூகசேவ கர் தக்கலை சந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் சங்க தலைவர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்திற்கு முதல் முறையாக பெண் போலீஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாக கூறினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை காண்காணிப்பாளரின் (டி.எஸ்.பி.) கீழ் 5 காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் என மொத்தம் 7 காவல் நிலையங்கள் உள்ளன. தனியாக டி.எஸ்.பி. அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தூர், ராஜபாளையம் வடக்கு பகுதிகள் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

    இந்த பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தற்போது குறைந்து இருந்தாலும் அவ்வப்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுமாக இருந்து வருகிறது .

    இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி 3 மாதங்களாக காலியாக இருந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராஜபாளையம் பகுதிக்கு நேரடியாக டி.எஸ்.பி. தேர்வு எழுதி பயிற்சி முடித்தவரே டி.எஸ்.பி.யாக நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்த நிலையில், இன்று ராஜபாளையத்திற்கு புதிய பெண்போலீஸ் டி.எஸ்.பி.யாக ப்ரீத்தி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவர் 2020-ம் ஆண்டு நேரடி டி.எஸ்.பி.யாக தேர்வு எழுதி சேலத்தில் பயிற்சி முடித்து ராஜபாளையத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    கடந்த 3 மாதங்களில் ராஜபாளையம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.

    மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாகவும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி. பிரீத்தி தெரிவித்தார்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றால் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


    • திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் அஜய்தங்கம் பங்கேற்று, மாணவர்களுக்கான கடமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றியாற்றினார்.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி காஜா நகரில் உள்ள சமது மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் அஜய்தங்கம் பங்கேற்று, மாணவர்களுக்கான கடமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றி, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மஜ்லிஸ் உல் உலமா சங்க தலைவர் காஜா நஜீமுதீன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் ஷேக்முகமது சுஹேல், பள்ளி பொருளாளர் ஹாஜி. காஜாமியான் அக்தர், மஜ்லிசுல் உலமா சங்க துணை தலைவர்கள் ஹாஜி. முகமது சைபுதீன், முகமது அமீன், மஜ்லிசுல் உலமா சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் சாக்கோ, உடற்கல்வி இயக்குனர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்திரனாக திருச்சி தெற்கு காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.
    • மாணவியர் பேரவை உறுப்பினர் பட்டியலை வேதியியல் துணைத் தலைவர் புங்காயி வாசிக்க, பேரவை உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருச்சி;

    திருச்சிகாவேரி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை பதவியேற்பு விழா ராமசாமி ரெட்டியார் கலையரங்கில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்திரனாக திருச்சி தெற்கு காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர்சுஜாதா அனைவரையும் வரவேற்றார்.இளங்கலை ஆங்கிலத் துறை தலைவர் ஜெயஸ்ரீ அகர்வால் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலர் திருநீலகண்டன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

    மாணவியர் பேரவை உறுப்பினர் பட்டியலை வேதியியல் துணைத் தலைவர் புங்காயி வாசிக்க, பேரவை உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர் உறுதிமொழியை வாசிக்க மாணவியர் அவரைப் பின்பற்றி உறுதிமொழியை ஏற்றனர்.

    மாணவியர் பேரவை தலைவி மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி மேனகா ஏற்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் முத்துகிருஷ்ணன் கல்லூரி மலரனை வெளியிட, முதல் பிரதிநிதியை கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலாளர் திருநிலகண்டன் பெற்றுக்கொண்டார்.

    முடிவில் கல்லூரி மாணவியர் பேரவை பொருளாளர் மூன்றாம் ஆண்டு சமூக பணித்துறை மாணவி நிவேதா நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • முன்னாள் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் 56-வது பதவி ஏற்பு விழா ரோட்டரி ஹாலில் நடந்தது. வைமா திருப்பதிசெல்வன் தலைவராகவும், பார்த்தசாரதி செயலாளராகவும், பதவியேற்றனர். முன்னாள் தலைவர் ராதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மாவட்ட ஆளுநர் முத்து சிறப்பு விருந்தினராகவும், ஷாஜகான் கவுரவ விருந்தினராகவும், ராஜுக்கள் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் சுரேஷ் தளியத் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொண்டனர். துணை ஆளுநர்

    குமரேசன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி ரோட்டரி சங்கத்தின் 4 வழிச் சோதனை சன்பேக் அட்டை வழங்கப்பட்டது. நலிவடைந்த முதியோருக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • 10, 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் முத்து தலைமையில் நடந்தது. தலைவராக அங்குராஜ், செயலாளராக பால்சாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.

    மாவட்ட செயலாளர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி ஆளுநர் குமரேசன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    10 மற்றும் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    நகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேருக்குபுத்தாடைகள் வழங்கப்பட்டது. 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.

    ×