search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை பதவியேற்பு
    X

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை பதவியேற்பு

    • சிறப்பு விருந்திரனாக திருச்சி தெற்கு காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.
    • மாணவியர் பேரவை உறுப்பினர் பட்டியலை வேதியியல் துணைத் தலைவர் புங்காயி வாசிக்க, பேரவை உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருச்சி;

    திருச்சிகாவேரி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை பதவியேற்பு விழா ராமசாமி ரெட்டியார் கலையரங்கில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்திரனாக திருச்சி தெற்கு காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர்சுஜாதா அனைவரையும் வரவேற்றார்.இளங்கலை ஆங்கிலத் துறை தலைவர் ஜெயஸ்ரீ அகர்வால் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலர் திருநீலகண்டன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

    மாணவியர் பேரவை உறுப்பினர் பட்டியலை வேதியியல் துணைத் தலைவர் புங்காயி வாசிக்க, பேரவை உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர் உறுதிமொழியை வாசிக்க மாணவியர் அவரைப் பின்பற்றி உறுதிமொழியை ஏற்றனர்.

    மாணவியர் பேரவை தலைவி மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி மேனகா ஏற்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் முத்துகிருஷ்ணன் கல்லூரி மலரனை வெளியிட, முதல் பிரதிநிதியை கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலாளர் திருநிலகண்டன் பெற்றுக்கொண்டார்.

    முடிவில் கல்லூரி மாணவியர் பேரவை பொருளாளர் மூன்றாம் ஆண்டு சமூக பணித்துறை மாணவி நிவேதா நன்றி கூறினார்.

    Next Story
    ×