என் மலர்
உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
- 10, 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் முத்து தலைமையில் நடந்தது. தலைவராக அங்குராஜ், செயலாளராக பால்சாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
மாவட்ட செயலாளர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி ஆளுநர் குமரேசன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
10 மற்றும் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
நகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேருக்குபுத்தாடைகள் வழங்கப்பட்டது. 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.
Next Story






